பக்கம் எண் :

இயனிலைப் படலம்19

அது-அதி-தி
தி-றி
தி-சி
அல்-அள்
அள்-அண
அல்-அர்
அர் அம்-அவ்-அவு
அவு-அவி-வி
அவு-அபு-பு பு+அம்
அல்+பு
அவு-அகு
அகு-கு
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
மறதி, அமைதி
நன்றி
மாட்சி, வறட்சி
மஞ்சல்-மஞ்சள்
முரண்
மயல்-மயர்
நன்னர்
மழவு
மறவி
மாண்பு, பண்பு, அன்பு
நுண்-நுட்பு-நுட்பம், இன்-இன்பம்
இயல்பு
குழவு-குழகு
நன்கு, அழகு

இங்ஙனமே ஏனை யிருசுட்டிற்கும் ஒட்டிக்கொள்க.

எ-டு : இ - வெகுளி, இல்-எழில் (அழகு), இதம் - பெருமிதம்.

சினைப்பெயர்

எ-டு: தறுகண் (அஞ்சாமை).

இடப்பெயர்

எ-டு: அகம்-வஞ்சகம், தலை-உறுதலை, கண்-இடுக்கண்.

நீர்ப்பெயர்

நீர் - நெடுநீர் (மறவி), மை-தன்மை, நன்மை.

குணங்கள் பெரும்பாலும் வினைவாயிலாய் வெளிப்படுவ தால் குணப்பெயர்களும் பெரும்பாலும் வினையடிப் பெயர் களாகவேயுள்ளன.

இனிப்பு புளிப்பு முதலியன சொல்லால் தொழிற்பெயரா யினும், பொருளாற் பண்புப்பெயராம்.

அஞ்சாமையும் மறமும் கண்ணால் வெளிப்படுதலின், அக் குணத்தைக் குறிக்கக் கண் என்னும் சொல் ஈறாயிற்று. ‘கடுங்கண் மறவர்‘ என்னும் வழக்கை நோக்குக.

கண் கால் கை தலை முதலிய சினைப்பெயர்கள், இடப் பெயராகவும் இருவகை வழக்கிலும் ஆளப்பெறும்.

தமிழ்நாடு வெப்பநாடாதலின், குளிர்ச்சியைத் தரும் நீரின் பெயரும் மழையின் பெயரும் இனிய தன்மையைக் குறிக்கலாயின. பின்னர் அவை தன்மை என்னும் பொதுப்பொருளில் ஆளப்பெற்றன.