பக்கம் எண் :

இயனிலைப் படலம்35

(4) உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது (எதிர்காலம்)

உது. எ-டு: செய்யுது, கூறுது, வருது.

உது ஈறு துவ்வளவாகக் குறுகி, அடிநீண்ட லகர ளகரவீற்று வினைமுதனிலைகளோடு கூடும்போது, றுகர டுகரமாகத் திரியும்.

எ-டு: செல்-சேல்+து = சேறு.
கொள்-கோள்+து = கோடு.

ஒ.நோ: செல்-சேல்+தல் = சேறல் (தொழிற்பெயர்)
கொள்-கோள்+தல் = கோடல் (தொழிற்பெயர்).

தன்மைப்பன்மை யீறுகள்

(1) தன்மைப் பன்மைப் பெயர்களினின்று தோன்றியவை.

ஏ-எம், (நாம்) - ஆம்-அம், ஆம்-ஓம்.

(2) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை.

து+உம் (பன்மையீறு)=தும்.

தும் - டும். தும் - றும்

(3) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.

கு+உம் (பன்மையீறு)=கும்.

(4) உகர்ந்தாய் பிறந்தது (எதிர்காலம்),

எ-டு: செய்யுதும், கூறுதும், வருதும்.

து-று. சேறு+உம் (பன்மையீறு)=சேறும்.

து-டு. கோடு+உம்(பன்மையீறு)=கோடும்.

(5) செய்யும் என்னும் முற்றினின்று தோன்றியது.

செய்யும்-உம்.

முன்னிலைவினை யீறுகள்

முக்கால நிகழ்ச்சிவினை யீறுகள்

முன்னிலைப் பெயர்களினின்று தோன்றியவை.

ஒருமை (நீ)-ஈ-இ.

ஈ - ஏ - ஐ - ஆய்.
எ-டு : வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய்.
ஒ.நோ: சீ-சே-சை(இகழ்ச்சிக்குறிப்பு).
உரை - உராய், குழை-குழாய்.