பக்கம் எண் :

இயனிலைப் படலம்37

பன்மை

(1) முன்னிலைப் பன்மைப் பெயரினின்று தோன்றியவை

(ஊம்) - உம். எ-டு : செய்யும்

உம்+கள். எ-டு : செய்யுங்கள்

உம்+(நீம்+ஈம்-இம்)-இன். எ-டு : செய்யுமின்- செய்ம்மின்

மின்+கள் எ-டு : செய்ம்மின்கள்

மின் என்னும் ஈற்றின் மகரம் நெறி (விதி) முதல் என அறிக.

கள் என்பது படர்க்கை யீறேனும் இரட்டைப் பன்மை குறித்து மூவிடத்தும் வரும்.

எ-டு: நாங்கள், நீங்கள், அவர்கள்.

செய்யுமின் என்பதிலுள்ள உம்மின் (உம்+இன்) என்னும் இரட்டைப்பன்மையை, செய்யுங்கள் என்பதிலுள்ள உங்கள் (உம்+கள்) என்பதுபோலக் கொள்க. செய்ம்மின் என்பதன் இரட்டைப்பன்மைப் பொருள் மறைந்தபின், கள்ளீறு பிறவற்றொடு சேர்ந்ததுபோல் அதனோடும் சேர்ந்தது. இம் முக்கைப் பன்மையைப் பெண் பெண்டாட்டி என்பதுபோன்ற மீமிசைச் சொல்லாகக் கொள்க.

(2) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.

செய்+உது+ஈர் = செய்யுதீர்-செய்யுதிர்செய்திர்.

(3) செய்யாய் என்பதற்கொத்து சொல்லும் வடிவம்.

வியங்கோள்வினை யீறுகள்

வியங்கோள்வினை யீறுகள் மூவகையில் தோன்றும்.

(1) தொழிற்பெயரீறுகள்

அல். எ-டு:செயல்.

"ஒல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்." (குறள்.33)

தல். எ-டு: செய்தல்.

"இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்." (தொல்.502)

(2) அகரவீற்று வினையெச்ச ஈறு

செய்ய-அ. எ-டு: வரப்புயர!

நடக்க-க. எ-டு; வாழ்க!