| ஆர்க்காடு என்னும் ஊர் வேலூர் வட்டத்தைச் சேர்ந்தது; மிகப் பழமை யானது. "அழிசி யார்க்காடு" என்று குறுந்தொகையிலும் (258), "அரியலங் கழனி யார்க்காடு" என்று நற்றிணையிலும் (190), வந்துள்ளது. ஆர் = ஆத்தி. ஆர்க்காடு= ஆத்திக்காடு. இச் சொல்லைப் புராணிகர் ஆறுகாடு என்று பிறழக் கொண்டு, வடமொழியிலும் சடாரணியம் என்று மொழிபெயர்த்து விட்டனர். ஷட் = ஆறு. ஆரணியம் = காடு. |
| தாயம்மை, சேலம் 9. |
| * கடல்கோளால் அழிந்த இலக்கிய நூல்களுள் "பண்ணத்தி" என்பதுவும் ஒன்று எனப்படுகிறது. அந் நூல் பற்றிய விளக்கங்கள் கிடைக்குமாயின் அருள்கூர்ந்து தெரிவியுங்கள். |
| | "பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத்தி யியல்பே." | (1436) |
| என்பது தொல்காப்பிய நூற்பா. |
| "பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு..... அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கட்கண்டும் முதலாயின........ அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க" என்பது பேராசிரியர் உரை. |
| காலஞ் சென்ற பண்டாரகர் (Dr.) பெரும் பேராசிரியர் (மஹா மஹோபாத்தியாய) உ.வே. சாமிநாதையர் அவர்கள் பண்ணத்தியை நாடோடிப் பாட்டென்றார்கள். அவர்கள் நாடோடிப் பாட்டென்றது நாட்டுப்புறப் பாட்டை. |
| பண்ணத்தியென்பது, இந்துத்தானிப் பாட்டுகளில் வரும் தொகைய ராவாயிருக்கலாம். |
| * "பாவம்" "பாவி" என்பன தமிழ்ச் சொற்கள்தாமா? |
| 'பாவம்' 'பாவி' என்பன வடசொற்கள். அறங்கடை, கரிசு, தீவினை என்பன பாவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். |
| * "குணகுணி சம்பந்தம்" (மறை - திருநாவுக்கரசு எழுதிய மறைமலை அடிகள் வரலாறு 64ஆம் பக்கம்) என்ற விளக்கத்தின்படி நல்லறிஞர் அழகிய தோற்றங்களில் விளங்க வேண்டியிருக்க, சாக்ரடீசு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய சிறந்த அறிஞர் அழகற்ற தோற்றம் பெற்றி ருந்ததேன்? |