82 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
கேட்பாள். அவள், "என் குழந்தையைக் கிணற்றில் முறித்துப் போட்டுவிட்டுக் குளத்தில் முழுகிவிட்டு வந்தேன்" என்று சொல்வாள். "நீ எந்தக் குளத்தில் முழுகினாய்?" என்று தலைமையானவள் கேட்பாள். அதற்கு அவள், "தயிர்க்குளத்தில் முழுகினேன்" என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமை யானவள் "போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய் விட்டது" என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள். மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பயிற்சி இவ் விளை யாட்டிலுண்டு எனலாம். இந்த ஆட்டுச் சிறுமியருக்குரியதா யினும், ஐந்தாண்டிற்கும் பத்தாண்டிற்கும் இடைப்பட்ட சிறுவரும் இதிற் கலந்துகொள்வர். | பின்பு, "இரண்டாவது போன காமாட்சி ஓடிவா", "மூன்றாவது போன காமாட்சி ஓடிவா," என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள். ஒவ்வொரு தடவையும் முன் சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப்பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி "பருப்புக்குளத்தில் முழுகினேன்" என்பாள். அன்று, தலைமையானவள் "போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது" என்று சொல்லித் துரத்தி விடுவாள். மூன்றாவதுபோன காமாட்சி "நெய்க் குளத்தில் முழுகினேன்" என்பாள். உடனே, தலைமையானவள் "போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய்விட்டது" என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி "பவ்வீக்1 குளத்தில் முழுகினேன்" என்பாள். உடனே, தலைமையானவள் "போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது" என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண்மட்டும் "நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன்" என்பாள். உடனே தலைமையானவள் "வா வா வா" என்று சொல்லி அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும். | தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும் போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக்கொண்டு வருவது வழக்கம். |
1. இடக்கரான சொல் இடக்கரடக்கி அச்சிடப்பெற்றது. | | |
|
|