வ : (கணைக்காலிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன்1, விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (முழங்காலில் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (இடுப்பிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (தோளிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (தலையிற் கை வைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (தலைக்குமேற் கைதூக்கி) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
வ : (தலைக்குமேற் கைதூக்கிக் குதித்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா! கை : விடமாட்டேன் மலுக்கா! |
இங்ஙனம் உறழ்ந்துரையாடியபின், "ஆட்டுக் கறியும் சோறும் தருகிறேன், விடடா துலுக்கா!" என்று வரிசை முதல்வி கூறியவுடன், சிறைசெய்யப்பட்ட பிள்ளை விடுதலை செய்யப் படும். அதோடு விளையாட்டு முடியும். "விடடா துலுக்கா!" என்னும் ஏவலும், "விடமாட்டேன் மலுக்கா" என்னும் மறுப்பும், ஒருமை குறித்தனவேனும், கைகோத்து நிற்பவர் இருவரும் ஒருங்கே ஏவப்படுவதும் ஒருங்கே மறுத்துரைப்பதுமே மரபாம். |
1. 'பொன் தருகிறேன்' என்பது 'பொன்னு தாறேன்' என்று கொச்சை வடிவிற் சொல்லப்படும். |