இருப்பதற்கும், மாடி வீட்டுக்குச் சொந்தக்காரன் பணக்காரனாக இருப்பதற்கும் "விதிதான்" காரணம் என்ற மூடநம்பிக்கை போகும் வரையில் அவன் பல மாடி வீடுகளைப் பிறருக்கும் கட்டிக் கொடுத்துவிட்டு ‘தான் ஏன் அந்த மாடி வீடுகளில் ஒரு வீட்டின் உப்பரிகையில் உல்லாசமாக உலவக்கூடாது' என்று நினைத்துப் பார்க்காமல் நினைத்துப் பார்க்கவும் நேரமில்லாமல், பகலெல்லாம் உழைத்துவிட்டு இரவானதும், தன் குடிசைக்குள் குனிந்து செல்லுவான். மனதிலே இருந்த மூடநம்பிக்கை பகுத்தறிவுப் பகலவனைக் கண்டு மூடுபனிபோல நீங்க ஆரம்பித்த மறுகணமே, தொழிலாளி நினைக்க ஆரம்பித்துவிடுவான்; "நான் ஏன் மாடிவீட்டில் வாழக்கூடாது? பிறப்பில் ஒருவன் ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரனாகவும் ஏன் பிறக்க வேண்டும்?" என்று தன் மனதைக் கேள்வி கேட்பான். அந்த நினைப்பின் வளர்ச்சியைத் தடைப்படுத்த யாராலும் முடியாது. |