பக்கம் எண் :

26பேரறிஞர் அண்ணா

வேண்டும்.     கிராமங்களுக்குச்  சென்று மக்களுடைய நிலையையும்
நினைப்பையும்   நேரில்  காணவேண்டும்.  சென்று  பார்த்தால்தான்
தெரிந்துகொள்ள  முடியும்.  அங்குச் சீர்திருத்ததைப் பற்றி மதுரகீதம்
கேட்கப்படவில்லை;   பேதம் போக்கப்படவில்லை.  எந்தத்  தீங்கும்
தீமையும்   தீய்க்கப்பட்டதாகக்   கருதப்பட்டதோ,  அந்தத்  தீங்கும்
தீமையும் தீய்க்கப்படாமல் இருப்பதைக் காண்பார்கள். எந்த நிலையும்
நினைப்பும்  நாட்டு  மக்களிடம்  இருக்கும்  என்று  கருதினார்களோ
அந்த    நிலையும்   நினைப்பும்    அவர்களிடம்    இல்லாததைக்
காணுவார்கள்.    எந்த    சமூகப்   பிரச்சினை   தீர்ந்துவிட்டதாகக்
கருதினார்களோ   அந்த   சமூகப்   பிரச்சினை  தீர்க்கப்படாததைக்
காண்பார்கள்.
 

உதாரணமாக     அண்ணாமலைப் பல்கலைக்    கழகத்திலிருந்து
மாணவர்கள்  சமூக சேவை செய்வதற்காக வடாற்காடு ஜில்லாவிலுள்ள
ஒரு  கிராமத்திற்குச்  செல்லுகிறார்கள்  என்று வைத்துக்கொள்வோம்.
மாணவர்கள்  அவ்வூர்  ஸ்டேஷனை விட்டு இறங்கிக் கிராமத்திற்குள்
நுழைகிறார்கள்.    நுழைந்த    மாணவர்கள்    அங்குள்ள    சில
கிராமத்தார்களைப்  பார்த்து,  "இவ்வூரில்  என்ன  விசேஷம்" என்று
கேட்பார்கள்.  உடனே  "எங்கள்  ஊரில் வீடுகள் சுகாதார முறைப்படி
கட்டப்பட்டிருக்கும்.  எங்கள்  ஊரில்  திருடர்  பயமில்லை,  எங்கள்
ஊரிலுள்ள  இளைஞர்கள்  பலசாலிகள், ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது.
ஒரு   பள்ளிக்கூடம்  இருக்கிறது.   அதில்   உள்ள  உபாத்தியாயர்
கெட்டிக்காரர்.   ஆண்டுக்கொரு   தடவை  விளையாட்டுப்  பந்தயம்
நடத்துவோம். ஒரு  பூங்கா  இருக்கிறது.  ஒரு  கண்  காட்சி  சாலை
இருக்கிறது"- இதுவல்ல  பதில்.  அவர்கள் அளிக்கிற பதில் மனதிலே
மகிழ்ச்சிக்குப் பதில் திகிலை உண்டாக்கும். அவர்கள் கூறுவார்கள்.
 

"இந்த  ஊரிலே விஷேசங்களா, ஒன்றும் விசேஷமில்லை! ஆனால்
அதோ இருக்கிறது பாருங்க அந்தச் சர்க்கார் சாவடி, அதிலே ராத்திரி
சரியா 12 மணி 1 மணிக்குப் பிசாசு ஒன்று வரும். அதுகிட்ட அம்புட்டு
கிட்டவங்க  பிழைக்க  மாட்டாங்க;  அதற்கு  மாணவர்கள்  பேயிடம்
நம்பிக்கை