பயிர்களைப் பற்றியும் அனுபவம் இருக்குமென்று எதிர்பார்த்தார்கள். இருவர்கள் எதிர் பார்த்ததும், இருவரிடமுமில்லை, எப்படி இருக்கும். எப்படி இருக்க முடியும்? மக்கள் மாணவர்களிடம் இல்லாததை எதிர் பார்க்கிறார்கள். மாணவர்கள் மக்களிடம் இல்லாததை எதிர்பார்க்கிறார்கள். இல்லாததை இருவர்களும் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இருவர்கள் இருப்பதும் வெவ்வேறு இடம். இருவர்களுக்குமிடையே பெரிய பிளவு, பாலம் கட்டப்படவேண்டும். பாலம், கல்வி அமைச்சர்தான் மாணவர்களைக் கொண்டு கட்டவேண்டும். |
கிராம மக்களுடைய மனதில் நல்லது இது, கெட்டது இது. உண்மை எது, கற்பனை எது என்று பொருள்களைப் பிரிக்கமுடியாதபடி மாசு படிந்திருக்கிறது. மனதிலே மாசுள்ள அந்த மக்களிடம் படித்துப் பட்டமும் பகுத்தறிவும் பெற்ற மாணவர்கள் நன்மையிது, தீமையிது, கற்பனை எது, உண்மை எது, என்று பொருளைப் பிரித்துக்காட்டி அறிவுப்பிரசாரம் செய்தாலோ, அவர்கள் சொல்லுவதை நம்புவதில்லை. கிராம மக்களிடம் இது இது கற்பனை என்று எடுத்துக்கூறிவிட்டால் உடனே, அவர்கள் கற்பனையைக் கைவிட்டுவிடுவார்கள். உண்மையைப் பின்பற்றுவார்கள். இவர்கள் ஏதோ பிரமாதப் படுத்துகிறார்கள் என்று நமது பகுத்தறிவுப் பிரசாரத்தைப் பற்றிப் பரிகாசமாகப் பேசுகிறவர்கள் பிரசாரம் செய்து பார்க்க வேண்டும். அவர்கள் பக்கத்திலுள்ள ஊர், வல்லம் படுகைக்குப் பிரசாரத்திற்குச் செல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கிராமப் பிரசாரத்திற்குச் சென்றவர்கள் கிராமத்துத் தலைவரை அணுகி நாங்கள் உங்கள் ஊரில் பிரசாரம் செய்ய விரும்புகிறோம். நீங்கள் தயவுசெய்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கேட்பார்கள். உடனே கிராமத்துத்தலைவர் பிரசாரர்களைப் பார்த்துக் கேட்பார். "நீங்கள் படித்தவர்கள் என்று சொல்லுகிறீர்களே - படித்தவர்களுக்கு வைக்கும் பரீட்சையைப் பாருங்கள் - உங்களுக்குப் பாரதம் தெரியுமா? பிரசாரர்கள் தெரியாது என்றவுடன் அப்ப ராமாயணம் |