பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்31

முன்னாள்     நிலையும் நினைப்பும் உயர்ந்திருந்ததையும் இந்நாள்
நிலையும்   நினைப்பும்  தாழ்ந்திருப்பதையும்,   தாழ்ந்ததை  உயர்த்த
வேண்டிய  தேவையைப்  பற்றியும்  எடுத்துக்கூறவேண்டும். எப்படியும்
மூடநம்பிக்கை  நீக்கப்பட  வேண்டும்.  பிறகு  நல்ல எண்ணங்களைத்
தூவினால்தான்   அவை   நல்ல   பலனைத்   தரும்.  பகுத்தறிவால்
பண்படாத எந்த உள்ளத்திலும்  நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது
நல்ல விளைவைத் தராது.
 

நீங்கள் ரயிலில் செல்லும்பொழுது கவனித்திருக்கலாம். உங்களுக்குப்
பக்கத்தில்    உள்ள    ஒரு   கிராமத்தாரிடம்,   ஏறிச்   செல்லுகிற
ரயிலைப்பற்றி,   ரயில்   கண்டுபிடித்தவனைப்   பற்றி,  கண்டுபிடித்த
காலத்தைப்   பற்றி,   ரயில்   எப்படி  ஓடுகிறது  என்பதைப்  பற்றி,
ஓடிக்கொண்டிருக்கிற  ரயிலை  ஒரு  நொடியில் எப்படி எதிரே உள்ள
கைப்பிடியால்  நிறுத்தலாம்  என்பதைப்  பற்றிக்   கூறுங்கள். ஜன்னல்
வழியாக  எதையோ  கவனித்துக்  கொண்டு காதில் விழாததுபோலவே
இருப்பார்.  ஆனால்  கொஞ்சநேரத்திற்கெல்லாம்  ஜன்னல் வழியாகத்
தெரியும்  ஒரு குன்று, குன்றின்மேல் தெரியும்  கோபுரம். கோபுரத்தின்
மேல் தெரியும் விளக்கு, அவைகளைக் கவனித்துப் பார்ப்பார். உடனே
பக்கத்திலுள்ளவரைப்     பார்த்துக்கேட்பார்    -     தூங்கினாலும்
தொடையைக்கிள்ளிக்  கேட்பார்  -  அது என்ன கோயிலுங்க! என்று,
 

விஞ்ஞானம்    இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பதுபோல வேறு எந்த
நாட்டிலும்  மதிப்பற்றிருக்காது.  நான்  இதோ பேசுகிறேன்; என் முன்
ஒலி  பெருக்கி  இருக்கிறது, அது நான் பேசுவதைப் பெரிதாக்கி நாலா
பக்கத்திலுள்ள  பலரும் கேட்கும்படிச் செய்கிறது. அது எப்படி வேலை
செய்கிறது   என்று  கூறிப்பாருங்கள்;  மேட்டூர் அணைக்கட்டை எப்ப
கட்டியிருக்கிறார்கள்     என்று   கூறிப்பாருங்கள்.   கப்பல்   எப்படி
கனமாயிருந்தும்     அது    எப்படி   கடலில்   மிதக்கிறது   என்று
கூறிப்பாருங்கள்;    ஏரோப்ளேன்    எப்படி    பறக்கிறது    என்று
கூறிப்பாருங்கள்;    அல்லது   எந்த  ஒரு  விஞ்ஞான  சாதனத்தைப்
பற்றியாவது கூறிப்பாருங்கள். ஆச்சரியமாக கேட்க