பக்கம் எண் :

32பேரறிஞர் அண்ணா

மாட்டார்கள்;     அவைகளில்  அதிசயமிருப்பதாவும் அவர்களுக்குத்
தோன்றாது. அப்படிக்  கொஞ்சநேரம் கேட்டாலும் அதை மறுகணமே
மறந்து விடுவார்கள். 'அற்புத சக்தியிடம்' உள்ள அபார நம்பிக்கையும்
மதிப்பும்  அவைகளிடமிருக்காது.  ரேடியோவைப்  பற்றிக் கூறுங்கள்;
ஒருவர்  இலண்டனில்  பேசுவதை நாம் கேட்கலாம் என்று கூறுங்கள்;
டெலிவிஷன்  மூலம்  மாஸ்கோவில் ஆடும் ஒரு மாதைப் பார்க்கலாம்
என்று  கூறுங்கள்.  எதோ  கேட்பார்களே  ஒழிய அதில் ஆச்சரியம்
இருப்பதாக  நினைக்கமாட்டார்கள்.  கூறும்பொழுது அப்படியா! என்று
சொல்லுவார்கள்!   அவ்வளவுதான்.   இவ்வளவையும்  கேட்டுவிட்டுத்
திடீரென்று   சொல்லுவார்கள்,   "நீங்கள்!   இதெல்லாம்  ஆச்சரியம்
இருப்பதாகக்  கூறுகிறீர்கள்!  என்ன  ஆச்சரியம் இருக்கிறது? அங்கே
ஒரு   வேப்பமரமுங்க,   அதன்   மகிமை,  காயெல்லாம்  கசக்காமல்
தித்திக்குதுங்க!   ஜனங்க  கூட்டம்  கூட்டமாகப்  போறாங்க"  என்று
சொல்லுவார்கள்.
 

விஞ்ஞானத்திடம்     இப்படி   ஏன்    அவர்களுக்கு   மதிப்பு
இருப்பதில்லை?  காரணம்  எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள்
சிரமப்பட்டுக்  கண்டுபிடிக்கவில்லை.  பென்சிலினைக் கண்டுபிடித்தவர்
எங்கள் அப்பா, அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் எங்கள் அண்ணன்,
ரேடியோவைக்   கண்டுப்பிடித்தது  எங்கள்  தாத்தா,  மின்சாரத்தைக்
கண்டுபிடித்தவர்கள்   எங்கள்   மூதாதையர்  என்றிருந்தால்  அதன்
அருமை  தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து
எதிர்ப்பைப் பார்க்காமல், கேலி, கண்டனங்களைப் பொருட்படுத்தாமல்,
ஆபத்துக்கு  அஞ்சாமல்  மூளை  குழம்புமே, கண் குருடாகுமே, கால்
முடமாகுமே    என்று    யோசிக்காமல்   கஷ்டப்பட்டு   விஞ்ஞான
சாதனங்களைக்   கண்டுபிடித்தவர்களெல்லாம்   மேல்   நாட்டார்கள்.
எனவேதான்    அவர்கள்    விஞ்ஞானத்தைப்    போற்றுகிறார்கள்.
அவர்களுக்கு  அதன்  அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு
வைத்திருக்கிறார்கள்.  இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும்
கஷ்டப்படவில்லை;    கஷ்டப்படாமல்    சுகம்    எப்படித்தெரியும்,
ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில்