பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!37

வரவேற்கின்றது.     எக்கட்சியினராயினும்    செய்கின்ற   தொண்டு
தமிழுக்கும்  தமிழ் நாட்டிற்கும் பயன்படுகிற தென்றால், தமிழனுடைய
உள்ளம்  குளிர்கிறது.  உடனே  கவிகளைக் கட்டி அணைக்கத் தனது
இரு  கரங்களையும்  நீட்டுகின்றான்.  பாராட்டுகிறான்; பரிசளிக்கிறான்.
இது நாட்டின் நற்காலத்திற்கோர் எடுத்துக் காட்டு.
 

இதற்கு முன
 

இதற்கு முன்பெல்லாம், கடந்த 10, 15 ஆண்டுகளாக, இப்படிப்பட்ட
நிகழ்ச்சிகள்  நடந்தது  கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங்கூடக்
கருதினாரில்லை. தமிழுந்  தன்னந் தனியே தமிழரை விட்டுப் பிரிந்து
உலவிற்று.     உதாரணமாக,        அப்பொழுதெல்லாம்    தமிழ்
ஆசிரியர்களுக்கும்,     மாணவர்களுக்கும்    எவ்வளவு   தொடர்பு
இருந்ததென்றால்,    முருகனுக்கும்  தெய்வயானைக்கும்  எவ்வளவோ
அவ்வளவு.  தமிழ்ப்  பண்டிதர்களுடைய   நிலையே  தனி. அவர்கள்
சரிந்த  தலைப்பாகையும்,  உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும்
வீட்டில்   அரைடஜன்  குழந்தைகள்   என்ற  எண்ணமும், குறைந்த
ஊதியமும் அவர்களைப்  பரிதாபகரமான  நிலையிலே கொண்டுவந்து
நிறுத்திற்று. அதிக  ஆற்றலிருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால்
நிலை  தாழ்ந்தது. தமிழனுக்குத்  தாய் மொழியைப் கற்றுக்  கொடுத்த
காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழுவது,  தள்ளி
வைப்பது    ஆகியவற்றின்   பிரதிபலிப்பு   மாணவர்களிடையேயும்
தென்பட்டது. தமிழ் வகுப்பு என்றால் இஷ்டப்பட்டால் போகிற வகுப்பு
என்று  நினைத்தார்கள்.  தமிழ்  வகுப்பு நடந்து  கொண்டேயிருக்கும்.
தெய்வயானையை   விட்டு   விட்டு  வள்ளியைத்  தேடிக்  கொண்டு
முருகன்  போவதுபோல்,  மாணவர்கள் வாத்தியாரை  விட்டு  விட்டு
வெளியே போய்விடுவார்கள்.
 

ஆனால்    அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்கு சென்றாலும்
தமிழ்,   தமிழர்   என்ற  பேச்சுகளையே  நான்  பார்த்திருக்கிறேன்.
ஓரிரண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று சபதஞ்
செய்து  கொண்டிருந்தவர்கள்கூட,  'இன்று  தமிழிலேயே  பேசுவேன்;
தமிழிலேயே எழுதுவேன்.