பக்கம் எண் :

40பேரறிஞர் அண்ணா

அதற்குக்     காரணம்  எனது அறியாமையல்ல. என் கண்முன் சங்க
இலக்கியங்கள்   நர்த்தனமாடவில்லை.   என்  கண்முன்  அவற்றைக்
கொண்டு வந்து புலவர் பெருமக்கள் நிறுத்தவில்லை.
 

யார் அணுகுவார்கள்?
 

நாவலர்களும்,     பாவலர்களும்   சங்க இலக்கியங்களைச் சுற்றி
நாலுபக்கமும்  வேலி  அமைத்து,  இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி
உயரத்தில்  எழுப்புச்  சுவரை எழுப்பி வைத்துக் கொண்டும் "உள்ளே
ஆடுது   காளி,   வேடிக்கைப்   பார்க்க   வாடி"  என்பது  போலத்
'தொல்காப்பியத்தைப் பாரீர். அதன் தொன்மையைக் காணீர்' என்றால்
அதனிடம்  யார்  அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு
வெளியேற்றி,  நாட்டிலே நடமாடவிட வேண்டும். நடன சுந்தரிகளாகச்
சிறுசிறு  பிரதிகள்  மூலம். தொல்காப்பியக் கருத்துக்களைத் தொகுத்து
வெளியிட்டால்தான்   தொல்காப்பியம்    சிறுசிறு    குழந்தைகளாக
ஒவ்வொருவருடைய மடியிலேயும்  மனத்திலேயும் தவழும். ஒவ்வோர்
இல்லமும்   இலக்கியப்   பூங்காவாகக்  காட்சியளிக்கும்.  இன்றையப்
புலவர்கள்.  உண்மையிலேயே  இனிமையையும், எளிமையையும் சங்க
இலக்கியத்துடன்   சேர்த்து   மக்களுக்கு  ஊட்டியிருப்பார்களானால்,
சங்ககாலப்   புலவர்களைப்  போற்ற   வேண்டும்  என்ற  எண்ணம்
அவர்களுக்கு  இருக்கு  மானால், அவர்கள் ஒவ்வொர் இல்லத்தையும்
இலக்கியப்   பூங்காவாக்கும்  உழவர்களாக  இருந்திருக்க  வேண்டும்.
ஆனால்,   அப்படியில்லை   என்பதை   நினைக்கும்  பொழுதுதான்
அவர்கள் இவ்வளவு நாள்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல;
துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.
 

கம்பனா? இளங்கோவா?
 

புலவர்கள்   தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக் கொண்டு, ஒரு
சில     புலவர்களையும்,    கவிகளையுமே    பொது    மக்களுக்கு
அறிமுகப்படுத்தியும், பொது மக்களின் பாராட்டுதலுக்கு அந்தச் சிலரே
அருகதையானவர்கள் என்று