பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!45

கண்ணைத்      திறந்தால்   போதும்;    கண்ணிலிருந்து  நெருப்பு
ஜ்வாலைகள்  பறக்கும்;  எதிரிலே  உள்ள அத்தனைப் பொருள்களும்
சாம்பலாகி  விடும்  என்று பதில் சொல்லுவார். அது இருக்க இது ஏன்
என்ற பிற்போக்கான நோக்கமும், சோம்பேறித்தனமும்தான் காரணம்.
 

அது இருக்க இது ஏன்?
 

'அது    இருக்க  இது  ஏன்'  என்று  மேல்  நாடுகளிலே  கருதி
இருப்பார்களானால்,  ஆளில்லா  விமானத்திற்குப்  பிறகு அணுகுண்டு
கண்டுபிடித்திருக்க  முடியுமா? தொல்காப்பியம் நமக்கு இருக்கும்போது,
நமக்கு    வேறேன்ன     வேண்டும்    என்றிருந்தால்,    அகமும்
சிலப்பதிகாரமும் கிடைத்திருக்க வழியுண்டா? சிலப்பதிகாரமே போதும்
என்றிருந்தால்,       கலிங்கத்துப்பரணி         கிடைத்திருக்குமா?
கலிங்கத்துப்பரணியே     போதுமென்றிருந்தால்    மனோன்மணீயம்
தோன்றியிருக்க  முடியுமா?  மனோன்மணீயம் போதுமென் றிருந்தால்,
பாரதியாரின் தேசீய கீதங்களைக் கேட்டிருக்க முடியுமா? பாரதியாரின்
தேசியகீதங்களே     போதுமென்றிருந்தால்,    தேசிய    விநாயகம்
பிள்ளையின்   தாயினுமினிய   அன்பு  குழைத்தூட்டும்  பாக்களைப்
பார்த்திருக்க    முடியாது.   தேசியவிநாயகம்  பிள்ளையே   போது
மென்றிருந்தால், நாமக்கல்லாரின் "கத்தியின்றி ரத்த மின்றி" என்ற புது
மாதிரியான  சண்டைத்  தத்துவப்  பாடலைக்  கண்டிருக்க முடியுமா?
அதுபோலத்தான்         நாமக்கல்லாரே     போதுமென்றிருந்தால்
'கொலைவாளினை  எடடா!  மிகு  கொடியோர்  செயலறவே' என்னும்
பாரதிதாசனின்  உணர்ச்சிமிக்க  புரட்சிகரமான பாடலைக் கேட்டிருக்க
முடியாது.
 

காலத்தின் சிருஷ்டி கர்த்தா
 

பாரதிதாசன், மேல்நாட்டுக் கவிகளைப் போல கலையைக் காலத்தின்
கண்ணாடியாக்குகிறார்.  காலத்தையே  சிருஷ்டிருக்கிறார். காலத்தையே
சிருஷ்டிருக்கிறார் என்பது மாத்திரமல்ல, காலத்தை மாற்றுகிறார்.
 

காலத்தை மாற்றுகிறார்  என்பது  மட்டுமல்ல.  மாறிய  காலத்திற்கு
நம்மை அழைத்துச் செல்கிறார்; அது மாத்திரமல்ல;