பக்கம் எண் :

46பேரறிஞர் அண்ணா

சமயம்    கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார். தென்றல்
வளரும்;  நிலவு  வளரும்; செல்வம் வளரும். அவை போல அவரது
கவிதைகளும் வளர வேண்டும்.
 

பத்துப் பேர்
 

ஆனால்,  அவை வளரக்கூடாது என்று ஒரு பத்துப் பேர்! அந்தப்
பத்துப்  பேருடைய  பெயரையும்  இது அரசியல் மேடையாயிருந்தால்
குறிப்பிட்டிருப்பேன்.   இது  அறிவு  மேடையானதால்  குறிப்பிடாமல்
விடுகிறேன்.      கங்கணம்      கட்டிக்      கொண்டிருக்கிறார்கள்.
அவர்களெல்லோரும்,   தங்களைத்   தவிர   வேறு   யாரும்  சங்க
இலக்கியங்களை  அறிய  முடியாது;  அப்படியே  அறிந்தாலும் பொது
மக்களின்  ஆதரவிற்குத்  தங்களைத்  தவிர  வேறு யாரும் அருகதை
அற்றவர்கள் என்று கருதுகிறார்கள்.
 

கையில் ஊமையர்
 

ஒரு     மாதத்திற்கு    முன்  சங்க  இலக்கியங்களில்  ஒன்றான
குறுந்தொகையில்,  ஓர்  உவமையைப்  படித்தேன்.  இந்தக் காலத்தில்
கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது
என்பதை ஊகித்தேன்.  வித்தியாசத்தைப் பாருங்கள்! இந்தக் காலத்துப்
புலவர்கள்  எந்தக்  கருத்தை  ஓர்  அந்தாதி மூலமாகவோ, வெண்பா
மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே
அடியில்   கூறி    விட்டார்.   அந்த   அடிதான்  'கையில்  ஊமன்'
என்பதாகும்.
 

ஒரு  தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப்
பாருங்கள்!  கட்டுங்கடங்காத  காளை;  இருந்தாலும்  கட்டுப்படுகிறான்
இரு    கண்களுக்கு.   மனத்தில்   ஏதோ   நினைக்கிறான்,   அதை
எதிரேயுள்ள  கட்டழகியிடம்  சொல்ல  முடியவில்லை;  எதைப்போல்
என்றால்  -  காலை  நேரம் காட்டிலே ஒரு பாறையிலே வெண்ணெய்
இருக்கிறது;  கையில்  ஊமையன்  இதற்குக் காவல். காலைக் கதிரவன்
காலையில் எழுந்து தனது இளங்கதிர்களைப் பாய்ச்சுகிறான்.
 

வெண்ணெய் உருகிறது. வெண்ணெய்  உருகுவதைப்  பார்க்கிறான்.
பார்த்ததும் 'ஐயோ! வெண்ணெய் உருகுகிறதே'