பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!51

அதனால்தான்     நமது புரட்சிக்கவி அந்த இரண்டையும் வெட்டு
என்கிறார்;  கூரில்லாத  வாளைக்  கூராக்கு  என்கிறார்.  படி இல்லாத
குளத்திற்குப்   படி  கட்டு  என்கிறார்.  குன்று  இல்லாத  இடத்திலே
செய்குன்றாவது  செய்  என்கிறார். குள்ள உள்ளத்தைக் கொலை செய்
என்கிறார்.   கூனாதே   நிமிர்ந்து  நட  என்கிறார்.  மேகத்திலிருந்து
நிலவொளி  வெளியே வரட்டும் என்கிறார். அந்த லோகத்தைப் பற்றிப்
பாடாதே;  இந்த  லோகத்தைப்  பற்றிப் பாடு என்கிறார். நாம் வாழும்
இந்த   இடத்தைப்  பாடு  என்கிறார்.  காலத்துக்கு  அடிமையாகாதே
என்கிறார்;   இலக்கணக்   கட்டுப்பாட்டுக்குப்   பயப்படாமல்   பாடு
என்கிறார்.   அதனால்தான்   அவரைப்   "புரட்சிக்   கவி"   என்று
அழைக்கிறோம்; உயிர்க்கவி உண்மைக்கவி என அழைக்கிறோம்.
 

புரட்சிப் புதுவை
 

புரட்சிக்கவி     என்றுதான்  அழைக்கிறோமேயன்றிப் புரட்சியில்
முதற்கவி   என்றழைக்கவில்லை. அவர்  இந்த  லோகத்தைப்  பற்றி
இவ்வளவு   புரட்சிகரமாகப் பாடுவதற்குக்  காரணம்  அவர்  வாழும்
புதுவை   ஆகும்.   புதுவையானது  பிரான்சு  நாட்டைச்  சேர்ந்தது.
பிரான்சு    சுதந்திரத்தின்  பிறப்பிடம்.   நாம்   எல்லாம்   ராஜாதி
ராஜாக்களைப்  போற்றிய  நேரத்தில்,  அங்கு அரசர்களைச் சிறையில்
அடைத்த   காலம்.   அரண்மனைகளை  ஆசிரமங்களாக  அநியாயக்
கோட்டைகளாக   ஆக்கிய   நேரத்திலெல்லாம்   அங்கு   பாஸ்டிலி
உடைக்கப்பட்ட  நேரம்.  ஆண்டான்  அடிமை  என்ற  வார்த்தைகள்
இங்கு  உலவிய நேரத்திலெல்லாம் அங்கு சுதந்திரம். விடுதலை, என்ற
கோஷங்கள்  வானைக்  கிழித்த  நேரம்.  அந்தப்  பிரான்சின் சாயல்
அந்த    பிரான்சின்    தென்றல்   அவர்   வசிக்கும்   புதுவையில்
வீசுவதால்தான்        அவர்        கொடுக்கும்       தலைப்புகள்
புரட்சிகரமானவையாகப்        புத்துலகக்           கருத்துக்களைத்
கொண்டிலங்குவனவாக இருக்கின்றன.
 

யாருக்குத் தெரியும்?
 

பல     கவிகளுக்கு,  அவர்கள்  பாடுகிற  பாட்டுக்களைப்  பற்றி
அவர்களுக்கே    தெரியாது.   ஆனைமுகனைப்   பற்றி   அழகாகப்
பாடுவார்கள்; துதிக்கையைப் பார்த்ததுண்டா? அதன் அகல