"உத்தேசமென்ன, ஸ்வாமி, தங்கள் உபதேசம் மிதிலாபுரி மீது" என்று மன்னன் கூறினான். உடனே குரு, "யோசித்துச் செய். வடகிழக்கில் வால் நட்சத்திரம் தோன்றியிருக்கிறது. மன்னனுக்கு ஆகாது என்பார்கள், மேலும் இம்மாதம் நவக்கிரகங்கள் சரியில்லை; திசை மாறியிருக்கின்றன. ஆகையால் போர் தொடங்குமுன், ஓர் யாகம் நடத்தவேண்டும். அந்த வேள்வி வெற்றிகரமாக முடிந்தால்தான் உனக்குப் போரில் வெற்றி கிட்டும்" என்று கூறினார். மன்னன் அதற்குவேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். யாகம் நடந்தது. நெய்யை அக்கினியிலிட்டு வேதம் ஓதினர். ஒமப்புகை கிளம்பியது. ஆடு, கோழி அறுக்கப்பட்டன. பிறகுதான் நம் மூதாதையர்களுக்குப் போரில் வெற்றி கிட்டியது என்பதாக |