பக்கம் எண் :

106மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை மரபாகக்
 காட்டும்.
 
      எ-கா :அல்.
 
 
     செம்மல், கருவல், வள்ளல் - உடையோனை உணர்த்திற்று.
 
 
    வறுவல், நொறுவல் - செய்பொருளை உணர்த்திற்று.
 
 
    ஆடல் - தொழிலை உணர்த்திற்று.
 
 
     தோன்றல் - செய்வோனை உணர்த்திற்று.
 
 
    ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின்
 இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும்.
 
 
    எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி
 லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே
 குறித்தன.
 
 
    குற்றியலுகரச் சொற்களெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை
 ஏற்கும்.
 
 
    எ-கா : தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி.
 
 
    7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால்,
 பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு
 சேர்த்துக்கொள்ளலாம்.

          
எ-கா  :நெருஞ்சில் - ஆனைநெருஞ்சில்     அடை
நாவல்  - பெருநாவல்

     குன்று - குன்றம்- ஈறு.
 
 
     பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி
 னின்றும் திரிக்கலாம்.
 
 
     எ-கா : கடல், கடப்பான் படாகை.
 

     8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமை
 யடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு
 சேர்த்துக்கொள்ளலாம்.

   
எ-கா  :அறை - கண்ணறை