| கள்வர் பண்பாடு பாலைநிலத்தில் வாழ்ந்த கள்வர் மறவர் எயினர் வேட்டுவர் முதலிய வகுப்பினர், ஓருணவும் விளையாத கடுங் கோடைக்காலத் தில் வழிப்பறியையும் கொள்ளையையும் களவையும் மேற்கொள்ள நேர்ந்தது. அங்ஙனம் நேரினும், பண்பாட்டைக் கைவிடவில்லை. தெய்வ வணக்கம், எளியார் பொருளைக் கவராமை, புலவரையும் முனிவரையும் போற்றல், விருந்தோம்பல், அரசப்பற்று, ஈகையா ளரைக் காத்தல் முதலிய நற்கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். பட்டினத்தடிகள் துளுவநாட்டுக் கோகரணத்தில் பிள்ளை யார் கோயிலில் ஓகத்திலிருந்தபோது, அந்நகர மன்னரான பத்திரகிரி யாரின் அரண்மனையில் பல அணிகலங்களைக் கவர்ந்த கள்வர், தாம் முன்பு வணங்கி நேர்ந்துகொண்டவாறே பிள்ளையார் கோயிற்குச் சென்று, ஒரு விலையுயர்ந்த பதக்கத்தைப் பட்டினத்தடிகள் கழுத்திற் பிள்ளையாரென்று கருதி இட்டுச் சென்றனர். "கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின் களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்." (129-133) என்னும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதி எயினரின் விருந் தோம்பற் பண்பை உணர்த்தும். கோவலன் விலையேறப் பெற்ற பொற்சிலம் பணிந்திருந்த கண்ணகியோடு காட்டுவழியாய்ச் சென்றதுமன்றி, வழிப்பறித்துக் கொள்ளை கொண்டுண்ணும் வேட்டுவச்சேரியிலும் தங்கினதற்குக் காவலாயிருந்தது, கண்ணகி கற்புமட்டுமன்று, கவுந்தியடிகளின் துறவுநிலையுமாகும். மாடலன் செங்குட்டுவனிடத்தும், பராசரன் பல்யானைச் செல்கெழு குட்டுவனிடத்தும், ஏராளமாய்ப் பொன் னும் அணிகலமும் பெற்று வழிப்பறி கொடாமல் ஊர் திரும்பிய தற்கும், மறையோர் (பிராமணர்) முனிவர்போற் கருதப்பட்டதே கரணியமாம். புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும், அவ்வப்போது வள்ளல்களிடம் பெற்ற பரிசிலைக் காட்டு வழிகளிற் பறிகொடாது வீடுகொண்டு வந்து சேர்த்ததும் கள்வரின் பண்பாட்டுத் தன்மை யினாலேயே. பொய்யாமொழிப் புலவர் தஞ்சைவாணன்மீது கோவை பாடி அரங்கேற்றி, அவன் தேவியாரிடம் நானூறு பொற்றேங்காய் பெற்றுப் பாலைநில வழியாய்ச் சென்றபோது வழிமறித்த முட்டை |