முதற் பத்தெண்ணுப் பெயர்களும் பகிர்வுப் பொருளில் இரட்டிக்கும்போது, ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப் புணரும். ஒன்றொன்றாய், இரண்டிரண்டாய் என்பதினும் ஒவ்வொன்றாய், இவ்விரண்டாய் என்பது சாலச் சிறந்ததாகும் . வெவ்வேறு பப்பாதி என்பனவும் இங்ஙனமே. மெய்யீற்றுப் புணர்ச்சி மெய்யெழுத்துகள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இது இயல்பு புணர்ச்சியே. உ-ம்: போய் + இருக்கிறான் = போயிருக்கிறான் தனிக்குறிலையடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டிக்கும். இது விகாரப் புணர்ச்சியாம். உ-ம்: பொய் + உரைத்தான் = பொய்யுரைத்தான். போய்யிருக்கிறான் என்பது தவறு. ண்,ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள் ண், ம், ல், ள், ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இருவழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும். | எழுத்து | திரிபு | உதாரணம் | 1. | ண் | ட் | மண் +கலம் = மட்கலம் | 2 | ம் | ங் | மரம் + குறிது = மரங்குறிது | | | ஞ் | மரம் + சிறிது = மரஞ்சிறிது | | | ந் | மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும் | 3 | ல் | ற் | கல் + பலகை = கற்பலகை | 4 | ள் | ட் | கள் + குடம் = கட்குடம் | 5 | ன் | ற் | பொன்+ பணி = பொற்பணி | ண்,ள் என்னும் மெய்கள் தகரத்தொடு புணர்ந்து டகரமாகும் போது, அத் தகரமும் டகரமாகும். உ-ம்: மண் + தாழி = மட்டாழி முள் + தாழை = முட்டாழை மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு. ல்,ன் என்னும் பெயர்கள் தகரத்தோடும் புணர்ந்து றகரமாகும் போது அத் தகரமும் றகரமாகும். உ-ம்: கல் + தாழை = கற்றாழை பொன் + தோடு = பொற்றோடு கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு. |