பக்கம் எண் :

எழுத்தியல்55

  ii. மேற்கோள்.
      உ-ம்: "ஒழுக்கமுடைமை குடிமை," என்றார் திருவள்ளுவர்.

    ஒற்றைக்குறி வருமிடமாவன:
    தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொடர் தன்னையே குறித்தல்).

    உ-ம்: எ, பேடு.

  ii. வாய்பாடு.
      உ-ம்: செய்யும்,தான

  iii. சிறப்புக் குறியீடு
     உ-ம்: வடக்கிருத்தல்

  iv. மேற்கோட்குள் மேற்கோள்.
      உ-ம்: இயேசு ஜனங்களை நோக்கி, "ஆயக்காரன் ஆலயத்திற்கு 
      வெளியே நின்று, தேவனே பாவியாகிய என்மீது 
      இரக்கமாயிரும் என்றான்" என்றார்.

  v. பழமொழி. உ-ம். நூறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும்.

     குறிப்பு:- மேற்கோட்குறி யிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது.

8. பிறைக்கோடு -
Brackets

ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன:

   i.  மொழியெர்ப்பு.
      உ-ம்: கட்டி (
Solid )ப்பொருள்.

   ii. பொருள் கூறல்.
      உ-ம்: பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன்.

   iii. விளக்கம்.
      உ-ம்: நிலைமொழி (அதாவது முதலிலே நிற்கின்ற மொழி).

   iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.
       உ-ம்: ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) 
       இன்சொல்லாற் பேசவேண்டும்.

   v. எண் (சிறுபிரிவு)
      உ-ம்: (1)

   vi. பாடபேதம். உ-ம்: கண்டது கற்கப் பண்டிதனாவான் (or ஆகான்).

   vii. உரையிற் சொல் வருவித்தல்.
       உ-ம்: கல்லிடை - (இமய)மலையில்.