காய் - காச்
காள்
- காளம் = சுடுகை, காளவனம் = சுடுகாடு.
காளவாய்
= சுண்ணாம்புச் சுள்ளை.
காள்-காய்.
காய்தல் = எரிதல், சுடுதல், ஒளிவீசுதல், உலை காய்தல்,
நிலாக்காய்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
காய்
- காய்ச்சு. காய்ச்சுதல் = சுடவைத்தல், சமைத்தல்.
காய்
- காச் (வ.). வடசொல் ப்ர என்னும் முன்னொட்டொடு
கூடிப் ப்ரகாச் என்று வழங்குவதே பெரும்பான்மை.
ய
- ச, போலி.
காயம்-ஆகாச (வே.)
கள்
- களம் - கயம் = கருமை, கரிக்குருவி. கயம் - கசம்=
கருமை.இருட்டுக்
கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.
கயவாய்
= கரிக்குருவி, எருமை.
கயம்
- காயம் = 1. கரிய காயா மலர்.
"காயா
மலர்நிறவா" |
(திவ்.
பெரியாழ். 1 : 5 : 6) |
காயம்
- காயா. "காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே"
(கூர்மபு.இராமனவதா.)
2. கரிய வானம்.
"விண்ணென
வரூஉங் காயப்பெயர்" |
(தொல்.
எழுத்து. 305)
|
"காசமா
யினவெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40).
காயா
- காசா = 1. காயா மலர்.
"காசா
கடன்மழை யனையானை" (கம்பரா. கங்கை. 53).
2.
எருமை (பிங்.).
காசா
- காசை = காயா மலர்.
"காசைக்
கருங்குழலார்" (பதினொ. ஆளு. திருவுலா, 180).
காசா - காசர
காசா
= எருமை. மேற்காண்க.
காய்
(ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும்
வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ-காச
என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று
பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப்
பொருளேயில்லை.
|