பக்கம் எண் :

114வடமொழி வரலாறு

காய் - காச்

     காள் - காளம் = சுடுகை, காளவனம் = சுடுகாடு.

     காளவாய் = சுண்ணாம்புச் சுள்ளை.

     காள்-காய். காய்தல் = எரிதல், சுடுதல், ஒளிவீசுதல், உலை காய்தல்,
     நிலாக்காய்தல் என்னும் வழக்குகளை நோக்குக.

     காய் - காய்ச்சு. காய்ச்சுதல் = சுடவைத்தல், சமைத்தல்.

     காய் - காச் (வ.). வடசொல் ப்ர என்னும் முன்னொட்டொடு
     கூடிப் ப்ரகாச் என்று வழங்குவதே பெரும்பான்மை.

     ய - ச, போலி.

காயம்-ஆகாச (வே.)

     கள் - களம் - கயம் = கருமை, கரிக்குருவி. கயம் - கசம்=

     கருமை.இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.

     கயவாய் = கரிக்குருவி, எருமை.

     கயம் - காயம் = 1. கரிய காயா மலர்.

"காயா மலர்நிறவா" (திவ். பெரியாழ். 1 : 5 : 6)

     காயம் - காயா. "காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே"
     (கூர்மபு.
இராமனவதா.) 2. கரிய வானம்.

"விண்ணென வரூஉங் காயப்பெயர்"
(தொல். எழுத்து. 305)

     "காசமா யினவெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40).

     காயா - காசா = 1. காயா மலர்.

     "காசா கடன்மழை யனையானை" (கம்பரா. கங்கை. 53).

     2. எருமை (பிங்.).

     காசா - காசை = காயா மலர்.

     "காசைக் கருங்குழலார்" (பதினொ. ஆளு. திருவுலா, 180).

காசா - காசர

     காசா = எருமை. மேற்காண்க.

     காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும்
வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ-காச
என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று
பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப்
பொருளேயில்லை.