பக்கம் எண் :

130வடமொழி வரலாறு

     குடிகள் ஆடுகளும் அரசன் மேய்ப்பனும்போலக் கருதப்
பெற்றதினால், அரசன் கோவன் எனப் பெற்றான். அரசன் செங்கோல்
ஆயன் கைக்கோலுக் கொப்பாம்.

     கோவன்-கோன் = 1. இடையன். 2. அரசன்.

     கோன்-கோனார் = இடையர். கோன் - கோ = அரசன்.

     கோவன் என்பதைக் கோப என்று திரித்தும் பின்பு அதைக்
கோ+ப என்று பிரித்தும், கோவைப் பாதுகாப்பவன் என்று வடவர்
பொருள் கூறுவது பொருந்தாது. கோவன் என்பது ஆயன் (ஆ+அன்)
என்பதை யொத்ததே.

     ஆங்கிலத்தில் (தியூத்தானியத்தில்) கோ (OS), கூ (OE), கௌ (E)
என்று எடுப்பொலியின்றியே வழங்கி வருகின்றது. வேத ஆரியத்தில்தான்
go என்று எடுத்தும் gons என்று திரிந்தும் ஒலித்திருக்கின்றது.

கோசம் - கோச = உருண்டை.

     கோளம் - கோசம் = முட்டை (பிங்.).

     ள - ச, போலி. ஒ.நோ : உளு - உசு, இளி - இசி.

கோட்டம் - கோஷ்ட

     கோடுதல் = வளைதல். கோடு - கோட்டம் = 1.வளைவு.
2.நிலாவைத் சூழ்ந்த வட்டக்கோடு. 3.மதிலாற் சூழப்பெற்ற கோயில்.
"கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்" (சிலப். 14: 10). 4.மதிலாற்
சூழப்பெற்ற சிறைச்சாலை

"சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து"
(மணிமே. 19: 43)

கோட்டி - கோஷ்டீ (g)

     குலவுதல்=கூடுதல். குள்-கள்-களம். குழம்புதல் = கலத்தல், திரளுதல்.

     குல்-குள்-கொள். கொள்ளுதல் = 1. பொருந்துதல், கூடுதல்,
மனத்திற்குப் பொருந்துதல்.

     "கொள்ளாத கொள்ளா துலகு" (குறள். 470). 2.ஒத்தல். "வண்டினம்
     யாழ்கொண்ட கொளை" (பரிபா. 11: 125).

     கொள்-கோள் = குலை. "செழுங்கோள் வாழை" (புறம்.168).

     கொள் - கொள்ளை = 1. மிகுதி.

     "கொள்ளை மதத்த நால்வாய்" (பாகவ. 1:5:14). 2. கூட்டம்.