பக்கம் எண் :

132வடமொழி வரலாறு

கோடி1 - கோடி (-)

     கோடி = எல்லை, கடைசி, நுனி, நிலமுனை, முடிமாலை,
     உச்சியெண்ணாகிய நூறிலக்கம்.

"அடுக்கிய கோடி பெறினும்"
(குறள். 954)

     தெ.கோடி., மரா. கோடீ, இ. குடோட், ஆ. க்ேரார் (crore)

     முதற்காலத்திற் கோடியே கடைசியெண்ணாக விருந்தது. பின்பு
குவளை, தாமரை, குமுதம், வெள்ளம், ஆம்பல், நெய்தல் முதலிய
அடுக்கிய கோடா கோடிப் பேரெண்கள் எழுந்தன.

"ஐஅம் பல்என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்."

(தொல். 392)

     கோடு = 1. வளைந்த கொம்பு.

     2. விலங்கின் உச்சந்தலையிலுள்ள கொம்புபோன்ற மலை யுச்சிக் குவடு.

"பொற்கோட் டிமயமும்"
(புறம். 2:24)

     3. கொம்புங் குவடும் போன்ற உச்சி மயிர்முடி.

"குரற்கூந்தற் கோடு"
(கலித். 72: 20)

     கோடு - கோடரம் = தேரின் மொட்டு (பிங்.).

     கோடு - கோடகம் = முடி (மகுடம்).

     கோடு - கோடி = உச்ச எண்.

     கோடி என்னும் சொற்கு எல்லைப்பொருள், கோடு என்னும்
சொல்லின் நீர்க்கரைப் பொருளினின்று வந்திருத்தல் வேண்டும்.

கோடி2 - கோடி ()

     கோடி=கடை, நுனி, வடவர் வில்லைநோக்கி வளைந்த கடை என்பர்.

கோடகம் - கோட்டக (gh)

     கோடுதல் = வளைதல், திரும்புதல்.

     கோடு - கோடகம் = வட்டமாயோடுங் குதிரை.

     ஒ.நோ: மண்டிலம் = குதிரை (பிங்.). கோடகம் - கோடம் -
     கோணம் = குதிரை.

"பச்சைக் கோடகக் காற்றை"
(கல்லா. 17:48)

     கோடு - கோடரம் = குதிரை (பிங்.)

     கோடரம் - கோரம் = குதிரை, சோழன் குதிரை.