|
கோடி1 -
கோடி (-)
கோடி
= எல்லை, கடைசி, நுனி, நிலமுனை, முடிமாலை,
உச்சியெண்ணாகிய
நூறிலக்கம்.
| "அடுக்கிய
கோடி பெறினும்" |
(குறள்.
954)
|
தெ.கோடி.,
மரா. கோடீ, இ. குடோட், ஆ. க்ேரார்
(crore)
முதற்காலத்திற்
கோடியே கடைசியெண்ணாக விருந்தது. பின்பு
குவளை, தாமரை, குமுதம், வெள்ளம், ஆம்பல், நெய்தல் முதலிய
அடுக்கிய கோடா கோடிப் பேரெண்கள் எழுந்தன.
"ஐஅம்
பல்என வரூஉம் இறுதி
அல்பெயர்
எண்ணினும் ஆயியல் நிலையும்." |
(தொல். 392)
|
கோடு
= 1. வளைந்த கொம்பு.
2.
விலங்கின் உச்சந்தலையிலுள்ள கொம்புபோன்ற மலை யுச்சிக் குவடு.
| "பொற்கோட்
டிமயமும்" |
(புறம்.
2:24)
|
3.
கொம்புங் குவடும் போன்ற உச்சி மயிர்முடி.
| "குரற்கூந்தற்
கோடு" |
(கலித்.
72: 20)
|
கோடு
- கோடரம் = தேரின் மொட்டு (பிங்.).
கோடு
- கோடகம் = முடி (மகுடம்).
கோடு
- கோடி = உச்ச எண்.
கோடி
என்னும் சொற்கு எல்லைப்பொருள், கோடு என்னும்
சொல்லின் நீர்க்கரைப் பொருளினின்று வந்திருத்தல் வேண்டும்.
கோடி2
- கோடி ()
கோடி=கடை,
நுனி, வடவர் வில்லைநோக்கி வளைந்த கடை என்பர்.
கோடகம் - கோட்டக
(gh)
கோடுதல்
= வளைதல், திரும்புதல்.
கோடு
- கோடகம் = வட்டமாயோடுங் குதிரை.
ஒ.நோ:
மண்டிலம் = குதிரை (பிங்.). கோடகம் - கோடம் -
கோணம் = குதிரை.
| "பச்சைக்
கோடகக் காற்றை" |
(கல்லா. 17:48)
|
கோடு
- கோடரம் = குதிரை (பிங்.)
கோடரம்
- கோரம் = குதிரை, சோழன் குதிரை.
|