"வார்தல்
போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" |
(தொல். 800)
|
சர்-சரம்=
நீண்ட அல்லது நேரான மணிக்கோவை அல்லது
மலர்த்தொடை.
சரஞ்சரமாய்த்
தொங்குகிறது என்னும் வழக்கை நோக்குக.
சரக்கொன்றை
= நேர் மலர்த்தொடையாகப் பூக்கும் கொன்றை.
வடவர்
காட்டும் ஸ்ரு என்னும் சொற்கும் ஒழுகு, ஓடு என்பனவே
பொருள்.
சல்லகம் - ஜல்லக
(jh) = தாளக்கருவி.
சல்
- சல்லகம் = சல்லென வொலிக்கும் தாளக்கருவி.
சல்லரி - ஜல்லரீ
(jh)
சல்லரி
= 1. திமிலைப்பறை. "சல்லரி யாழ்முழவம்" (தேவா.89:2). 2.
கைத்தாளம்.
சலசல - ஜலஜ்ஜல
(jh) = நீர்த்துளிகள் விழும் ஒலிக்குறிப்பு.
| "சலசல
மும்மதஞ் சொரிய" |
(சீவக.
82)
|
சலவை - க்ஷலா
சல்-சலவை
= துணிவெளுக்கை. தெ. சலவ (உ), க. சலவெ.
வ.
க்ஷல் = அலசு, சலவை செய்.
சலி - சல் (c)
சல்
- சலி. சலித்தல் = அசைதல், மனங்கலங்குதல், சோர் வடைதல்,
அருவருப்புக் கொள்ளுதல், சல்லடையாற் சலித்தல்
அல்லது சுளகால்
(முறத்தால்) தெள்ளியெடுத்தல்.
சலியடை
- சல்லடை. க. ஜல்லிசு, தெ. ஜல்லிஞ்சு = சல்லடையாற்
சலி.அசைதல், நடுங்குதல், கலங்குதல், நெறிதிறம்புதல்
என்னும்
பொருள்களே வடசொற்குள.
சவ்வு - சவி (ch)
= தோல், மீந்தோல்.
சவ்
- சவ்வு = மெல்லிய தோல், மூடுதோல்.
சவம் - சவ =
பிணம்.
சா
- சாவு - சாவம் - சவம் = பிணம்.
|