பக்கம் எண் :

மொழியதிகாரம்143

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள"


(தொல். 800)

     சர்-சரம்= நீண்ட அல்லது நேரான மணிக்கோவை அல்லது
     மலர்த்தொடை.

     சரஞ்சரமாய்த் தொங்குகிறது என்னும் வழக்கை நோக்குக.

     சரக்கொன்றை = நேர் மலர்த்தொடையாகப் பூக்கும் கொன்றை.

     வடவர் காட்டும் ஸ்ரு என்னும் சொற்கும் ஒழுகு, ஓடு என்பனவே
பொருள்.

சல்லகம் - ஜல்லக (jh) = தாளக்கருவி.

     சல் - சல்லகம் = சல்லென வொலிக்கும் தாளக்கருவி.

சல்லரி - ஜல்லரீ (jh)

     சல்லரி = 1. திமிலைப்பறை. "சல்லரி யாழ்முழவம்" (தேவா.89:2). 2.
கைத்தாளம்.

சலசல - ஜலஜ்ஜல (jh) = நீர்த்துளிகள் விழும் ஒலிக்குறிப்பு.

"சலசல மும்மதஞ் சொரிய"
(சீவக. 82)

சலவை - க்ஷலா

     சல்-சலவை = துணிவெளுக்கை. தெ. சலவ (உ), க. சலவெ.

     வ. க்ஷல் = அலசு, சலவை செய்.

சலி - சல் (c)

     சல் - சலி. சலித்தல் = அசைதல், மனங்கலங்குதல், சோர் வடைதல்,
     அருவருப்புக் கொள்ளுதல், சல்லடையாற் சலித்தல் அல்லது சுளகால்
     (முறத்தால்) தெள்ளியெடுத்தல்.

     சலியடை - சல்லடை. க. ஜல்லிசு, தெ. ஜல்லிஞ்சு = சல்லடையாற்
     சலி.அசைதல், நடுங்குதல், கலங்குதல், நெறிதிறம்புதல் என்னும்
     பொருள்களே வடசொற்குள.

சவ்வு - சவி (ch) = தோல், மீந்தோல்.

     சவ் - சவ்வு = மெல்லிய தோல், மூடுதோல்.

சவம் - சவ = பிணம்.

     சா - சாவு - சாவம் - சவம் = பிணம்.