|
சிச்சிலி - தித்திரி
(வே.)
சிச்சிலி
= 1. மீன்கொத்தி (சீவக. 2199, உரை).
2.
கதுவாலி வகை.
"அருமறையைச்
சிச்சிலிபண் டருந்தத் தேடும்" (திருமுறை கண்.17).
சித்து - சித்
(c) - இ.வே.
செத்தல்
= 1. கருதுதல்.
"அரவுநீ
ருணல்செத்து" (கலித். 45). 2. அறிதல்.
"துதிக்கா
லன்னந் துணைசெத்து" (ஐங்.106).
செ-செத்து=கருத்து,
அறிவு. செத்து-சித்து = கருத்து, அறிவு.
ஒ.நோ
: செந்துரம் - சிந்துரம்.
சித்து
- சித்தன் = அறிவன், முக்கால அறிவுள்ள முனிவன்.
|
"மறுவில்
செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்"
|
(தொல். 1021)
|
சித்து
- சித்தம் = கருத்து, மனம், அறிவு, ஓதி (ஞானம்).
சித்தம்
- சிதம் = மனம், அறிவு, ஓதி.
வடவர்
சி ('ci) என்றொரு செயற்கை மூலங்காட்டுவர். அது செ என்பதன் திரிபே.
சித் = கருது, அறி, காண், கவனி.
சித்தம் - சித்த
(c)
வடவர்
சித்தன் என்னும் சொல்லை, ஸாத் (dh) என்பதன் திரிபான ஸித் (dh) என்பதனொடு
தொடர்புபடுத்தி, ஸித்த (siddha) என்றும், சித்தியை ஸித்தி (siddhi) என்றும்,
காட்டுவர்.
ஸித்
= முடி, கைகூடு. ஸித்தி = முடிவு, முடிபு, கைகூடல், பேறு.
ஸித்த =அரும்பேறு பெற்றவன்.
சித்தன்
ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு. சித்து விளையாடல் என்பது உலக வழக்கு. கலம்பக
வுறுப்பும் சித்து என்றே பெயர் பெற்றிருத்தல் காண்க.
சித்திரம் - சித்ர
(c) - இ.வே.
செத்தல்
= ஒத்தல். செத்து = ஒத்து, போல (தொல். பொருள்.286, உரை).
செ
+ திரம் = செத்திரம் - சித்திரம் = ஒப்பு, ஓவியம், பலவண்ணம், திறமை,
புதுமை.
|