|
'திரம்'
ஒரு தொழிற்பெய ரீறு.
எ-டு
: மாத்திரம், மோட்டிரம் - மோத்திரம் = மூத்திரம்.
சித்திரக்
கம்மம் = ஓவிய வேலைப்பாடு
| "செந்நூல்
நிணந்த சித்திரக் கம்மத்து" |
(பெருங்.உஞ்சைக்.35:98).
|
. சித்திரக்கம்மி
= ஓவியத் தொழிலமைந்த ஆடைவகை
(சிலப்.74 : 108,உரை)
சித்திரச்
சோறு = பலநிறச் சோறு.
| "சித்திரச்
சோற்றிற் செருக்கினேன்" |
(அருட்பா.
6, அவாவறுப்பு. 7)
|
சித்திரப்
படம் = பல வண்ண அல்லது பூத்தொழிலமைந்த உறை.
"சித்திரப்
படத்துட் புக்கு" (சிலப்.7 : 1).
சித்திரப்
பாலடை, சித்திரப் பாலை என்பன பூண்டு வகைகள்.
சித்திரப்
புணர்ப்பு = வல்லெழுத்தை மெல்லெழுத்தாகக் கொள்ளும்
சித்திரமாடம்
= ஓவியம் வரைந்த மாளிகை.
"பாண்டியன்
சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்" (புறம். 59).
சித்திரவண்ணம்
= நெடிலுங் குறிலும் விரவிய ஓசை.
"சித்திர
வண்ணம்
| நெடியவுங்
குறியவும் நேர்ந்துடன் வருமே" |
(தொல்.1478)
|
செய்தல்
= ஒத்தல்.
| "வேனிரை
செய்த கண்ணி" |
(சீவக. 2490)
|
செள்-செறு-செறி.
செள் - செண்டு - செண்டை = இரட்டை.
செள்-செய்-செ.
ஒ.நோ: பொய்-பொ. பொத்தல் = துளைத்தல்.
சித்திரம்
- சித்திரி. சித்திரித்தல் = சித்திரம் வரைதல், சுவடித்தல்,
வண்ணித்துப்
பேசுதல்.
வடவர்
சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு,
தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ண வேறுபாடு,
வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல்
என்னும் வினை வடமொழியிலில்லை.
சிதம்பரம் - சிதம்பர
(c)
சிற்றம்பலம்
- (சித்தம்பலம்) - (சித்தம்பரம்) - சிதம்பரம்.
|