பக்கம் எண் :

154வடமொழி வரலாறு

    "சீரை தைஇய வுடுக்கையர்" (திருமுரு. 126).

     2. சீலை (பிங்.). சீரை - சீலை - சேலை.

     வடவர் காட்டும் மூலம் சி (ci). சி=அடுக்கு, அடுக்கிக் கட்டு.

சுக்கு - சுஷ்க

     உள்-சுள். சுள்ளெனல் = சுடுதல். சுள் - சுள்ளை = பானை சட்டியும்
செங்கலும் சுடுமிடம். சுள்ளை - சூளை.

     சுள் - சுடு - சுடல் - சுடலை = சுடுகாடு.

     சுள்-சுட்கு. சுட்குதல் = காய்தல். வறளுதல். சுட்கம் - சுட்கு -
சுக்கு - சுக்குதல் = உலர்தல்.

     சுக்கு = காய்ந்த இஞ்சி (திவா.).

சுட்கம் - சுஷ்க

     சுள் என்று வடமொழியில் சுஷ் என்று திரியும். ஒ.நோ : உள் - உஷ்.

     சுஷ்க = உலர்ந்த பொருள்.

     சுக்குச் சுக்காய்க் காய்ந்து போய்விட்டது என்னும் வழக்குத் தமிழில்
இருந்தாலும், சுக்கு என்பது தமிழிற் சிறப்பாய் உலர்ந்த இஞ்சியைத்தான்
குறிக்கும். வடமொழியிலோ அது உலர்ந்த பொருள்கட் கெல்லாம்
பொதுவாகும்.

சுண்டம் - சுண்டா = கள்

     சுள் - சுண்டு - சுண்டம் = கள். சுண்டு - சுண்டை = கள். சுண்டுதல்
= சுண்டக்காய்ச்சுதல், சுடுவதுபோற் கடுமையா யிருத்தல்.

சுண்டி - சுண்டி (h)

     சுள் - சுண்டு. சுண்டுதல் = காய்தல், நீர்வற்றுதல். சுண்டு - சுண்டி =
சுக்கு.

சுண்டு - சுண்ட் (h)

     இதுவே மேலதன் மூலம். இவற்றிற்கு வடமொழியில் மூலம் இல்லை.

சுண்ணம் - சூர்ண் (c)

     சுள்-சுள்ளை-சூளை. சுள் - சுண் - சுண்ணம் = நீற்றுதல், நீறு,
சுண்ணாம்பு, பொடி, பூந்தாது.

"தாழைக் கொழுமட லவிழ்ந்த சுண்ணம்"
(மணிமே. 4: 18)