பக்கம் எண் :

மொழியதிகாரம்155

     சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு.

     சுண்ணித்தல் = நீற்றுதல் (சங். அ.).

சுண்ணகம் - சூர்ணக (c)

     சுண்ணம் - சுண்ணகம் = நீறு, பொடி.

     வடவர் காட்டும் மூலம் சர்வ் (c) என்பதே.

     சர்வ் = பல்லினால் அரை, மெல், சவை, சுவை.

     இது சவை என்னும் தென்சொற் றிரிபே.

சுதை - ஸுதா (dh) = சுண்ணாம்புச் சாந்து.

     சுல் - சுல்லு = வெள்ளி (சூடா. வெண்பொன்).

     சுல் - (சுலை) - சுதை = 1. வெண்மை (சூடா.)

     2. வானவெள்ளி (அக. நி.) 3. மின்னல் (சங். அக.).

     4. சிப்பிச் சுண்ணாம்பு.

     "வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணிமே. 6:43).

     5. பால். "சுதைக்க ணுரையைப் பொருவு தூசு" (கம்பரா.வரைக்.16).

     6. அமிழ்து சுதையனைய வெண்சோறு" (கம்பரா.குலமுறை.18).

     இங்குக் குறிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், வெண்மை யாய்
இருத்தலை நோக்குக. ல - த, போலி. ஒ.நோ: சலங்கை-சதங்கை,
மெல்-மெது.

     மா. வி. அ. காட்டியுள்ள மூலமும் பொருள் வரிசையும் வருமாறு:

     ஸு - தா (dh) = ஸு + தே (dhe) = நற்குடிப்பு, தேவர் குடிப்பு,
அமிழ்து, தேன், சாறு, நீர், பால், வெள்ளை யடிப்பு, பூச்சு, சாந்து, சுதை.

     ஸு = நல்ல. தே = உறிஞ்சு, குடி.

சும - க்ஷம் = பொறு.

     பொறுத்தல் = சுமத்தல், தாங்குதல், தாளுதல், மன்னித்தல்,
இடந்தருதல். இளக்காரங் கொடுத்தல், துன்பந் தாங்குதல் (பொறை),
அமைதியாய்க் காத்திருத்தல் (பொறுமை).

     சும, பொறு என்பவை ஒருபொருட் சொற்கள். பொறு என்னும்
சொல்லின் பொருள்களே க்ஷம் என்னும் சொற்கும் உரியன.

     உம்-உம்பு-உம்பர்-மேல், மேலிடம், உச்சி. உம்-சும் - (சுமை) -
சிமை = உச்சி, குடுமி. சும் - சும. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல்.
சும்-சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை, முதுகு,