|
சுண்ணம்
- சுண்ணம்பு - சுண்ணாம்பு.
சுண்ணித்தல்
= நீற்றுதல் (சங். அ.).
சுண்ணகம் - சூர்ணக
(c)
சுண்ணம்
- சுண்ணகம் = நீறு, பொடி.
வடவர்
காட்டும் மூலம் சர்வ் (c) என்பதே.
சர்வ்
= பல்லினால் அரை, மெல், சவை, சுவை.
இது
சவை என்னும் தென்சொற் றிரிபே.
சுதை - ஸுதா (dh)
= சுண்ணாம்புச் சாந்து.
சுல்
- சுல்லு = வெள்ளி (சூடா. வெண்பொன்).
சுல்
- (சுலை) - சுதை = 1. வெண்மை (சூடா.)
2.
வானவெள்ளி (அக. நி.) 3. மின்னல் (சங். அக.).
4.
சிப்பிச் சுண்ணாம்பு.
"வெள்ளி
வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணிமே. 6:43).
5.
பால். "சுதைக்க ணுரையைப் பொருவு தூசு" (கம்பரா.வரைக்.16).
6.
அமிழ்து சுதையனைய வெண்சோறு" (கம்பரா.குலமுறை.18).
இங்குக்
குறிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், வெண்மை யாய்
இருத்தலை நோக்குக. ல - த, போலி. ஒ.நோ: சலங்கை-சதங்கை,
மெல்-மெது.
மா.
வி. அ. காட்டியுள்ள மூலமும் பொருள் வரிசையும் வருமாறு:
ஸு
- தா (dh) = ஸு + தே (dhe) = நற்குடிப்பு, தேவர் குடிப்பு,
அமிழ்து, தேன், சாறு, நீர், பால், வெள்ளை யடிப்பு, பூச்சு, சாந்து, சுதை.
ஸு
= நல்ல. தே = உறிஞ்சு, குடி.
சும - க்ஷம்
= பொறு.
பொறுத்தல்
= சுமத்தல், தாங்குதல், தாளுதல், மன்னித்தல்,
இடந்தருதல். இளக்காரங் கொடுத்தல், துன்பந் தாங்குதல் (பொறை),
அமைதியாய்க் காத்திருத்தல் (பொறுமை).
சும,
பொறு என்பவை ஒருபொருட் சொற்கள். பொறு என்னும்
சொல்லின் பொருள்களே க்ஷம் என்னும் சொற்கும் உரியன.
உம்-உம்பு-உம்பர்-மேல்,
மேலிடம், உச்சி. உம்-சும் - (சுமை) -
சிமை = உச்சி, குடுமி. சும் - சும. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல்.
சும்-சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை, முதுகு,
|