|
சுரம்
என்னும் சொல் முதுவேனிற் காலத்திற் கடுமையாய்ச் சுடும்
பாலைநிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமையால், சுரநோயைக்
காய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.
ஜ்வர
என்னும் சொல் காய்ச்சலை மட்டுங் குறிக்கும்; பாலை
நிலத்தைக் குறிக்காது.
சுரிகை - சுரிகா
(ch)
சுர்-சுருக்கு.
சுறுக்கெனல்=குத்துதற்குறிப்பு. சுர் - சுரி.சுரித்தல் =
துளைத்தல்.
சுரி
- சுரிகை = 1. உடைவாள்.
| "சுரிகை
நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை" |
(பெரும்பாண்.
73)
|
2. கத்தி.
வடமொழியில்
சுரிகா என்பதன் அடி 'சுர்'. ஆயின், மா.வி. அ.
க்ஷு ர் என்பதை மூலமாகக் காட்டும். இவை யிரண்டும் சுரி என்பதன்
திரிபே.
சுரி
- சூரி = ஓலையில் துளையிடுங் கருவி, சுரிகை.
ம.,
க., து. சூரி, தெ. த்சூரி.
சூரிக்கத்தி
= சூரியுள்ள கத்தி. க. சூரிக்கத்தி, தெ. த்சூரிக்கத்தி.
சூரி
என்பது உலக வழக்கு; சுரிகை என்பது செய்யுள் வழக்கு.
ஏட்டில்
துளையிடுங் கருவியைச் சுரியூசி என்பது யாழ்ப்பாண வழக்கு.
சுருங்கை - ஸு ருங்கா
சுருங்குதல்=ஒடுங்குதல்.
சுருங்கு=(ஒடுங்கிய) சாய்கடை(பிங்.). இனி,
உட்டுளையான வழி என்றுமாம்.
சுருங்கு
- சுருங்கை = 1.நுழைவாயில் (பிங்.). 2. சிறுசாளரம்.
| "மாடமேற்
சுருங்கையி லிருந்து" |
(சீகாளத்.பு.
நக்கீர. 30). |
3.
நீர் செல்லுங் கரந்துபடை.
5.
தப்பியோடும் கீழ்நில நெடுவழி.
கீழ்நில
வழியைக் குறிக்கும்போது, சுரங்கம் என்பது உலக வழக்கு.
|