|
சுல்லி - சுல்ல
(c) = அடுப்பு.
சுல்
= சுள். சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா.). 2. மடைப்பள்ளி
(இலக். அக.).
சுவணம் - ஸு பர்ண
உ
- உவண் = மேலிடம்(சீவக.2853). உவணை = தேவருலகம்.
"ஆகநீத் துவணைமே லுறைந்தான்" (சேதுபு. விதூம.54). உவண்
- உவணம் = 1. உயர்ச்சி (திவா.).
2.
கலுழன் (கருடன்).
"சிறையுவண
மூர்ந்தாய்" (திவ்.இயற்: 1: 22).
3.
கழுகு (திவா.).
கலுழனுங்
கழுகும் உயரப் பறக்கும் பருந்தினத்தைச் சேர்ந்தன
வாதலின், அப் பெயர் பெற்றன.
"உயரவுயரப்
பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?"என்னும்
பழமொழியை நோக்குக.
உவணமுயர்த்தோன்
= கலுழக் கொடியனாகிய திருமால்.
உவணர்
= கலுழர்.
"உவணரோ
டியக்கர்" (கந்தபு. அயனைச் சிறை நீ. 2).
உவணவூர்தி
= "கலுழனை ஊர்தியாகக் கொண்ட திருமால்"
(தணிகைப்பு. அகத். 370).
உவணன்
= கலுழன் (திவா.). உவணம் - சுவணம் = கலுழன்
(சங். அக.).
ஒ.நோ
: உதை - சுதை, உருள் - சுருள், உழல் - சுழல்.
வடவர்
சுவணம் என்பதை ஸுபர்ண என்று திரித்தும், ஸு+பர்ண
என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலை யுடையது, இலை
போன்ற அழகிய சிறகுகளையுடையது, பெரும் பறவை, கலுழன் என்று
பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத் திறத்தின் பேரெல்லையைக்
காட்டியுள்ளனர்.
ஸு
= நல்ல. பர்ண = இலை.
சுவண்டை - ஸ்வத்
(இ.வே.)
சுவை
- சுவடு = சுவை, இனிமை
| "அடிமையிற்
சுவடறிந்த" |
(ஈடு,
2: 6: 5)
|
சுவடு
- சுவண்டு - சுவண்டை = சுவை, இன்சுவை.
|