"ஆண்டகைய
ரவ்வயி னடைந்தமை யறிந்தான்
ஈண்டுவகை வேலைதுணை யேழுலக மெய்த
மாண்டவர தன்சரண் வழங்கவெதிர் வந்தான்
நீண்டதமி ழாலுலகை நேமியி னளந்தான்." (36)
(கம்பரா.
ஆரணிய. அகத்தியப் படலம்) |
அகத்தியர் காஞ்சி
யடைந்தது
"குன்றிடை
முட்டி மறுகுங் குரீஇயின் தடையுண் டழுங்கி
நின்ற அருக்கன் முதலொர் நெறிகொளச் செல்ல விடுத்துத்
தன்றுணைப் பாவையி னோடுஞ் சார்தரு தாபத வேந்து
மன்றலம் பூம்பொழிற் காஞ்சி வளநகர் தன்னைமுன் கண்டான்." |
|
"கண்டு
தொழுது வணங்கிக் கையிணை உச்சியிற் கூம்ப
மண்டிய காதலிற் புக்கு மரபுளிச் செய்கட னாற்றி
அண்டர் பிரானார் தளிகள் அனைத்தும் முறையான் இறைஞ்சிப்
பண்டை மறைகள் முழங்கும் படரொளி ஏகம்பஞ் சார்ந்தான்."
|
|
"மன்னியஇத்
தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகியினி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்." (காஞ்சிப்பு. தழுவக். 226
- 7, 245) |
அகத்தியர் சையமலை யடைந்தது
"என்றிவை
யுலக மெல்லாம் உய்யுமா றியம்பி வேளை
வென்றவர் தழுவித் தேற்றி விடைகொடுத் தருளப் பெற்று
வன்றிறல் முனிவர் கோமான் மகிழ்ந்தடி வணங்கிப் போந்து
தன்றுணைக் கிழத்தி யோடுஞ் சையமால் வரையைச் சார்ந்தான்." (காஞ்சிப்பு.
தழுவக். 285) |
அகத்தியர் பொதிகைமலை
யடைந்தது
"சலம்ப
டைத்தவா தாவிவில் வலன்றனைச் சவட்டிய பெருநோன்பின்
வலம்ப டைத்தவன் அவ்வரை யணுகலும்
மறிதிரைக் கடலாடை
நிலம்ப டைத்தது தொன்னிலை யாவரும்
நிறைபெருங் களிகூர்ந்தார்
நலம்ப டைத்தசீர் உறுவனும் ஆயிடை
வதிந்துதென் மலைநண்ணி" |
|