"இருமொழிக்குங்
கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ" |
(காஞ்சிப்பு.
தழுவக். 248-9)
|
என்னும் செய்யுள்கள்
மாறுபடும் இரு சாராரையும் ஒப்புரவாக்கும்
நடுவர் கூற்றுப்போல் ஒலிப்பதால்,தென்மொழி
வடமொழிப்
போராட்டத்தை மறைமுகமாகத் தெரிவிப்பனவே.
19ஆம்
நூற்றாண்டில், சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணீயத்
தமிழ்த்தெய்வ வணக்கச் செய்யுளில்.
(தரவு
- 2)
|
|
"ஆரியம்போ
லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே." |
|
(தாழிசை
- 3)
|
|
"சதுமறையா
ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே." |
|
(தாழிசை
- 10)
|
|
"பத்துப்பாட்
டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே." |
|
(தாழிசை
- 11)
|
|
"வள்ளுவர்செய்
திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி." |
|
(தாழிசை
- 12)
|
|
"மனங்கரைத்து
மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ" |
என்று வெளிப்படையாய்
இப் போராட்டத்தைக் காட்டினார்.
இனி,
"ஓங்க
லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்" |
என்னும் பாடினார் பெயர்
தெரியாத தண்டியலங்கார வுரைப் பழைய
வெண்பா, தமிழே உலகமுத லிலக்கியச்
செம்மொழி
|