|
அருணம் - அருண
(இ. வே.)
அர்
- அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு.
அருணம்
- அருணன் = எழும் செங்கதிரோன்.
அருணமணி
= மாணிக்கம். அருணமலை = தீப்பிழம்பாய்
நின்றதாகச் சொல்லப்பெறும் மலை. அருணமலை = அண்ணா மலை,
அருணை.
ஆதித்தரின்
தாயாகச் சொல்லப்படும் அதிதியின் பெயரான ரு ()
என்னும் சொல்லினின்று, அருண என்னும் பெயர் பிறந்துள்ளதாக வடவர்
கூறுவர். இவ் 'ரு' அர் என்னும் தமிழ் வேரின் திரிபாயிருக்கலாம்.
அருந்து - அத் (இ.வே.)
L.
ed, E. eat.
ஒ.நோ
: மருந்து - மந்து (தெ.). உந்து - உத்து.
அலத்தகம் - அலத்தக
அலத்தகம்
- அரத்தகம். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தம் - அலக்த
அலத்தம்
- அரத்தம். அலத்தம் = செம்பருத்தி. இவை முன்னர்க்
காட்டப்பெற்றன. எல் (கதிரவன்) - இல் - அல்.
அலப்பு - லப்
லப்
- ரப் (இ.வே.) = அலப்பு.
அவை - சபா (sabh)
- இ. வே.
அமைதல்
= நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம்.
அமை=அவை.
ஒ.நோ : அம்மை - அவ்வை, குமி - குவி.
அவையடக்கியல்,
அவையல்கிளவி என்பன, தொல்காப்பி யர்க்கு
முன்பே தொன்னூல்களில் வழங்கிவந்த இலக்கணக் குறியீடுகளாம்.
"வாயுறை
வாழ்த்தே அவையடக் கியலே
செவியறி வுறூஉவென அவையும் அன்ன" |
(தொல்.
1367)
|
| |
|
| "அவையல்
கிளவி மறைத்தனர் கிளத்தல்" |
(தொல்.
925)
|
அவை - அவையம்.
|