|
"தந்தை
மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்" |
(குறள்.67)
|
அவை
- சவை. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை.
சவை
- சபா (வ.)
வடசொல்
வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங்
காட்டுவர்.
(1).
ஸ = ஸஹ (கூட). ஸ - சபா = கூட்டம்.
(2).
பா (bha) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு
(பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை.
இப்
பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும்
தென்சொல்லொடு தொடர்புடையதா யிருக்கலாம்.
பால்=வெண்மை.
"பாற்றிரு நீற்றெம் பரமனை" (திருவாச.446)
(3)
ஸிப்.
இது
உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச்
சொல். ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலியில் (C.O.D.) பின்வருமாறு
குறிக்கப்பெற்றுள்ளது :
sib
= a brother or sister. sibship = the group of children
from the same two parents.
OE.sib
(b), MDu. sib (be), OHG, sippi, Goth. sibjis.
இம்
மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமா யிருத்தல்
காண்க.
அளகம் - அலக
அள்=செறிவு.
அள்ளுதல்=செறிதல். அள்ளல் = நெருக்கம்.
அளம்
= செறிவு. அளம் - அளகம் = 1. பெண்மயிர் (பிங்.),
செறிந்த
கூந்தல். 2. மயிர்க் குழற்சி (பிங்.).
அளி - அலி
அள்
= கூர்மை, நீர்முள்ளி. அள் - அளகம் = பன்றிமுள்.
அள்
- அளி = கொட்டும் முள்ளுள்ளது, தேனீ.
அள் - அல (முள்)
ஒ.நோ:
நுள் - நள் - நள்ளி = நண்டு. நள்-நளி = தேள்.
வடமொழியில்
அலி என்னுஞ் சொல் தேளையுங் குறிக்கும்.
|