வடவர்
காட்டும் மூலமும் பொருள் வரிசையும் வருமாறு:
ப்ரீ=நிரப்பு,
நிறைவாக்கு, நிரம்பக் கொடு (இ. வே.); நிறை வேற்று,
முற்றுஞ் செலவிடு, முற்றும்வளை, மூடு (அ.வே.).
பரு
= கைகால், உறுப்பு; மலை, கடல், வானம், விண்ணுலகு.
பருஸ்=கணு,
முடிச்சு; உறுப்பு, பகுதி (இ. வே.). மா. வி. அ.
"a
joint or knot (esp. of a cane or reed, orig. 'fullness',
i.e. the full or thick part of the stalk"
என்று குறித்திருப்பதைக் கூர்ந்து நோக்குக.
பர்வன்
= கணு. முடிச்சு, உறுப்பு (இ. வே.); பிளவு, இடையீடு, பிரிவு,
பகுதி (ச. பி.); ஒரு கூட்டின் உறுப்பு (பிராதி.
நிரு.); ஒரு குறித்த
காலப்பகுதி (இ. வே.).
இது
மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுவதா
யிருத்தலைக் காண்க.
பத்தி-பக்தி (bh)
பகு-பஜ்
(bh). பக்தன்-பக்த (bh). இங்ஙனம் பகு, பத்தன், பத்தி
என்னும் தென்சொற்களும், பஜ், பக்த, பக்தி என்னும் வடசொற்களும்,
ஒரே மூலத்தினின்று தோன்றியிருப்பதால், வடசொற்கட்குக் காட்டிய
மொழிப்பொருட் காரணமே தென்சொற்கும் ஒக்கும் என அறிக.
பக்த=பகுக்கப்
பெற்றது, பகுதியானது, பாற்பட்டது, பாற்பட்ட வன்,
பற்றுள்ளவன், போற்றுபவன், வணங்குபவன், வழிபடுபவன்,
அடியான்
(மா.வி.அ.)
பக்தி=பகுக்கப்
பெற்றமை, பகுதியானமை, பாற்பட்டமை, போற்றுகை,
வணங்குகை, வழிபடுகை, தேவடிமை (மா.வி.அ.).
பத்தி
என்னும் சொல்லின் வடிவ வரலாற்றையும், அதன்
பொதுப்பொருளையும், பகு என்னும் சொல்லின்கீழ்க்
காண்க.
பற்று
என்பது இருதிணைப் பொருள்கள்மீது முள்ள அழுந்திய
ஆசையையே குறிக்கும்; பத்தி என்பது இறைவனிடத்தும் தலைவ னிடத்துங்
கொண்ட அச்சத்தொடு கூடிய உண்மையான பணி வன்பையே குறிக்கும்.
(3) ஐயுறவிற் கிடமானவை
கலியாணம்-கல்யாண
(இ.வே.)
கலித்தல்=ஆரவாரித்தல்,
மிக்கெழுதல், பெருகுதல், செருக் குதல்,
தருக்குதல், செருக்கி வளர்தல். தழைத்தல், மகிழ்தல்.
கலி=ஆரவாரம்,
பெருக்கு, செருக்கு, தழைத்தல், மகிழ்ச்சி.
யாணம்
= அழகு.
|