பக்கம் எண் :

மொழியதிகாரம்11

     வடவர் காட்டும் த்ரூ (d. ) என்னும் சொற்குப் பிளத்தல் என்பதே
பொருள்.

திமி-திம, திமீ

     திம்மை = பருமன். தெ. திம்மெ.

     திம்மன் = பருத்த ஆண்குரங்கு. க. திம்ம, தெ. திம்மடு.

      திம்மலி = பருத்தவள். திம் - திமி = எல்லாவற்றுள்ளும் பருத்த மீன்.

திரு-ச்ரி (ஸ்ரீ) - இ.வே.

     தில்லுமுல்லு = திண்டுமுண்டு. தில்-திர்-திரள்.

     திர்-திரு = திரண்ட செல்வம், திருமகள், சிறப்பு, பொலிவு, அழகு,
நற்பேறு, தெய்வத்தன்மை, தூய்மை.

     ஒ. நோ: வெறுத்தல் = மிகுதல். வெறுக்கை = மிகுதி, செல்வம்.

     செல்வத்தாற் சிறப்பும் பொலிவும், அரசச்செல்வத்தால் தெய்வத்
தன்மையும், தெய்வத்தன்மையால் தூய்மையும் ஏற்படு மென்பது
பண்டை யுலகக் கருத்து. செல்வத்தாற் சிறப்பும் பொலிவும் இக் காலத்து
முண்டு.

     திரு என்பது தெய்வத்தன்மையை அல்லது தூய்மையைக் குறிக்கும்
அடைமொழியாகக் கொள்ளப் பெற்றது.

     எ-டு: திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருச்சிற்றம்பலம்,
திருநீறு, திருப்பள்ளியெழுச்சி, திருமுறை, திருமேனி, திருவிழா,
திருவிளையாடல், திருவுளம்.

     தொன்றுதொட்டுத் திருவரங்கம் என்று வழக்கிவந்த இடப் பெயர்,
இன்று ஸ்ரீரங்கம் எனத் திரிந்து வழங்குகின்றது.

     வடவர் வடமொழியிலுள்ள சொற்கட்கு வலிந்தும் நலிந்தும்
மூலங்காட்டும் தம் வழக்கத்திற்கேற்ப, ச்ரி என்னும் சொல் ச்ரி1 அல்லது
ச்ரீ1 என்பதினின்று திரிந்ததாகக் கூறுவர்.

     ச்ரி1 = சார் (to lean). ச்ரீ2 = ஒளி. மா. வி. அ. இரண்டையும்
இணைத்துக் கூறும்.

தீய்-தீ (d) இ.வே.

     தீய்தல் = எரிதல், விளங்குதல்.

     தீய் - தீய்வு - தீவு - தீவம் = விளக்கு.

தீவம் - தீப