பக்கம் எண் :

122வடமொழி வரலாறு

     'ஆ' என்னும் இடையொட்டு ஆக என்னும் வினையெச்ச வீற்றின்
கடைக்குறையாகவு மிருக்கலாம்.

"பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு"
(நன். 24)

     என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவில், சொல்லாக என்பது
சொல்லா என்றும் சேயிழையாக என்பது சேயிழையா என்றும், ஆகவீறு
ஆவீறாக ஈறு குன்றி நிற்றல் காண்க. வ்யாக்ரு என்னும் சொற்கு, வேறாகச்
செய் என்னும் பொருளும் பொருந்துதல் காண்க.

     க்ரு என்பது, கருவி கருமம் என்னும் தென்சொற்கட்கு
முத னிலையாகிய கரு என்பதன் முதன்மெய்ந் நீக்கமே. இவ் வினை
கடைக்கழகத்திற்கு முன்பே வழக்கற்றது.

     சொல்லைக் கூறுபடுப்பதும் சொற்றொடரைக் கூறுபடுப் பதும்
சொற்றொகுதியாகிய மொழியைக் கூறுபடுப்பதும், ஆக மூவகைக்
கூறுபடுப்பே வியாகரணம்.

1. எழுத்தியல்

(1) வண்ணமாலை (வர்ணமாலா)

     வடமொழி நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு வர்ணமாலா எனப்பெறும். வண்ணம்-வர்ண. மாலை-மாலா. வர்ண, அக்ஷர என்பன எழுத்தின் பொதுப் பெயர்கள். இவற்றுட் பின்னது அசையையுங் குறிக்கும்.

வகையும் தொகையும்

உயிரெழுத்துகள் (13)

அ, . ஆ, இ, ஈ. உ, ஊ, ரு ரூ, லு, ஐ, ஓ, ஒள.
                         
a, ƒƒ, i, …, u, ‡, Šil, Š‡, lu, „, ai, †, au.

     அனுஸ்வார .

     விஸர்க(g):

மெய்யெழுத்துகள் (33)

     ஐவர்க்கம் (25)

      k, kh, g, gh, Œ