துள்-(துடு)-துடவை
= தோட்டம். துடு-துடை = தொடை.
துடு-துடர்
= தொடர். துடு-தொடு-தொடை = தொடர்.
துண்-தூண்
= 1. திரண்ட கம்பம். "சிற்றில் நற்றூண் பற்றி"
(புறம். 86). 2. தாங்கல். "துன்பந் துடைத்தூன்றுந் தூண்" (குறள். 615).
தூண்-தூணம்
= 1. பெருந்தூண்: "பசும்பொற் றூணத்து"
(மணிமே.1: 48). 2. பற்றுக்கோடு (அக. நி.).
தூண்-தூணி.
தூணித்தல் = பருத்தல்.
வடவர்
காட்டும் ஸ்தா (நில்) என்னும் மூலத்திற்கும் அதனின்
றமைந்த ஸ்தாணு (நிற்கும் அடி) என்னும் சொற்கும், தூண்
என்பத னொடு யாதொரு தொடர்புமில்லை.
தூணம்-தூண
தூணி1-தூணீ
துள்-(தூள்)-(தூளம்)-தூணம்
= துளைக்கப்பட்ட கூடு, அம்புப் புட்டில்.
துள்-(தூள்)-(தூளி)-தூணி
= அம்புப் புட்டில்.
"பொலம்பூந்
தும்பைப் பொறிகிளர் தூணி" |
(பதிற்.45:1)
|
ஒ.நோ:
தோள்-தோணி.
வடவர்
காட்டும் துல் (நிறு) என்னும் மூலமும், மா. வி. அ. கூறும்
பொறுப்பது (bearer) என்னும் பொருளும் பொருந்தா.
தூணி2
- த்ரோண (d) - இ. வே.
மேற்கூறியதே
இதற்கும். தூணி = 4 மரக்கால் கொண்ட முகத்த லளவு.
வடவர்
த்ரு4 (தரு, தாரு = மரம்) என்பதை மூலமாகக் காட்டுவர்.
தூது-தூத (dta)
தூது
= 1. தூதுமொழி.
"தூதுரைப்பான்
பண்பு" |
(குறள். 681)
|
2.
தூது சொல்வோன்.
"தக்க
தறிவதாந் தூது" |
(குறள்.
686)
|
தூது-தூதன்
(ஆ. பா.), தூதி (பெ. பா.).
தூது
என்னுஞ் சொற்கு, முன்சென் றுரைப்பது என்பதே வேர்ப்
பொருளாகும்.
|