ஒ.
நோ: உது-(உதழ்)-உதடு = வாயின் முன்னிருப்பது. உதழ்- இதழ்.
குது-தெ.
கொத்த = புதிய. த. கோடி = புதுமை, புத்தாடை.
ம.
கோடி.
புதுமை
என்பது, ஒரு பொருள் தோன்றுவதின் அல்லது
பயன்படுவதின் முன் நிலைமையே.
துது-தூது
= ஓர் அரசனின் வருகையை அல்லது போர்ச் செய்தியை,
மற்றோ ரரசனிடம் முன் சென்றறிவிப்பது. பிற்காலத்தில் செய்தி யறிவிப்பது
என்று மட்டும் பொருள்பட்டது.
நுது-நுதல்
= மண்டையின் முன்னுள்ள நெற்றி.
நுதலுதல்
= முன்சொல்லித் தொடங்குதல்.
புது
- இது வெளிப்படை.
மா.
வி. அ. து (செல்) என்பதை மூலமாக ஐயுற்றுக் காட்டும்.
தூரி-தூலி, தூரிகை-தூலிகா
தூர்
= குத்துச் செடியின் வேர்த்தொகுதி. தூர்-தூரி = தூர் போன்ற
தூரிகை (painter's brush).
தூரி-
தூரிகை.
தூளி-தூலி (dh)
துவைத்தல்
= இடித்தல். துவை-துகை. துகைத்தல் = இடித்தல்.
துகை-துகள் = இடித்த
தூள்.
துகள்-தூள்-தூளி-தூசி.
தூளித்தல் = தூளாக்குதல்.
இச்
சொல் மா. வி. அகரமுதலியில் இல்லை. ஆயின், சென்னைப்
ப. க. க. அகரமுதலியில் வடசொல்லாகக் காட்டப்பட் டுளது. தூளித்தல்
என்னும் வினைக்குத் தூளைப் பூசுதல் என்று பொருள் கொண்டுள்ளனர்
வடவர். தூலன, உத்தூலன-தொ. பெ.(வ.)
தேவன்-தேவ (இ.
வே.)
தேய்தல்
= உரசுதல். தேய்-தே= 1. (உரசிப் பற்றும்) நெருப்பு. 2.
(நெருப்பாகிய) தெய்வம்.
"தேபூசை
செய்யுஞ் சித்திர சாலை" |
(சிவரக.
நைமிச. 20)
|
3.
(தெய்வம் போன்ற) தலைவன்.
தே-தீ=நெருப்பு, விளக்கு, சினம், தீமை, எரியகம் (நரகம்). தீமை =
தீயின் தன்மை. ம., க. தீ. ஒ. நோ: தேன்-தேம்-தீம்.
|