பக்கம் எண் :

16வடமொழி வரலாறு

     ஒ. நோ: உது-(உதழ்)-உதடு = வாயின் முன்னிருப்பது. உதழ்- இதழ்.

     குது-தெ. கொத்த = புதிய. த. கோடி = புதுமை, புத்தாடை.

     ம. கோடி.

     புதுமை என்பது, ஒரு பொருள் தோன்றுவதின் அல்லது
பயன்படுவதின் முன் நிலைமையே.

     துது-தூது = ஓர் அரசனின் வருகையை அல்லது போர்ச் செய்தியை,
மற்றோ ரரசனிடம் முன் சென்றறிவிப்பது. பிற்காலத்தில் செய்தி யறிவிப்பது
என்று மட்டும் பொருள்பட்டது.

     நுது-நுதல் = மண்டையின் முன்னுள்ள நெற்றி.

     நுதலுதல் = முன்சொல்லித் தொடங்குதல்.

     புது - இது வெளிப்படை.

     மா. வி. அ. து (செல்) என்பதை மூலமாக ஐயுற்றுக் காட்டும்.

தூரி-தூலி, தூரிகை-தூலிகா

     தூர் = குத்துச் செடியின் வேர்த்தொகுதி. தூர்-தூரி = தூர் போன்ற
தூரிகை (painter's brush).

     தூரி- தூரிகை.

தூளி-தூலி (dh)

     துவைத்தல் = இடித்தல். துவை-துகை. துகைத்தல் = இடித்தல்.

துகை-துகள் = இடித்த தூள்.

     துகள்-தூள்-தூளி-தூசி. தூளித்தல் = தூளாக்குதல்.

     இச் சொல் மா. வி. அகரமுதலியில் இல்லை. ஆயின், சென்னைப்
ப. க. க. அகரமுதலியில் வடசொல்லாகக் காட்டப்பட் டுளது. தூளித்தல்
என்னும் வினைக்குத் தூளைப் பூசுதல் என்று பொருள் கொண்டுள்ளனர்
வடவர். தூலன, உத்தூலன-தொ. பெ.(வ.)

தேவன்-தேவ (இ. வே.)

     தேய்தல் = உரசுதல். தேய்-தே= 1. (உரசிப் பற்றும்) நெருப்பு. 2.
(நெருப்பாகிய) தெய்வம்.

"தேபூசை செய்யுஞ் சித்திர சாலை"
(சிவரக. நைமிச. 20)

     3. (தெய்வம் போன்ற) தலைவன்.

      தே-தீ=நெருப்பு, விளக்கு, சினம், தீமை, எரியகம் (நரகம்). தீமை =
தீயின் தன்மை. ம., க. தீ. ஒ. நோ: தேன்-தேம்-தீம்.