2.
திரண்ட ஊன்றுகோல்.
"தலைநடுங்காத்
தண்டூன்றா" |
(நாலடி.
14)
|
3.
திரண்ட உலக்கைப்படை.
"தண்டுமுதற்
சக்கரமு னேந்தும்" |
(திவ்.
பெரியதி. 3: 9: 10)
|
4.
திரண்ட தடிபோன்ற பொருள்.
எ-டு:
முதுகந்தண்டு, வீணைத்தண்டு.
5.திரண்ட
படை (சேனை). தண்டெடுத்தல் = படை யெடுத்தல்.
6.
கொடித்தண்டு போன்ற உறுப்பு. எ.டு: காதுத்தண்டு.
தண்டுதல்
= பொருள் திரட்டுதல்.
"தடியெடுத்தவ
னெல்லாம் தண்டற்காரனா?" |
(பழமொழி)
|
தண்டு-தண்டம்
= 1. பெருந்தடிப் படைக்கலம்.
"தண்டமுடைத்
தருமன்" (தேவா. 1055: 6).
3.
சேனை. எ - டு: தண்டநாயகன் = சேனைத்தலைவன்.
தண்டு-தண்டி
= தண்டால் தூக்கப்பெறும் பல்லக்கு.
தண்டி-தண்டிகை.
"வால்நீண்ட
கரிக்குருவி வலமிருந்து
இடஞ்சொன்றால்
கால்
நடையாய்ச் சென்றவரும் கனகதண்டி
யேறுவரே."
|
(பழமொழி)
|
தண்டு-தண்டியம்
= தண்டியப் படைக்கல் அல்லது கட்டை.
தண்டு-தண்டை
= தாமரைக்கொடித்தண்டு போன்ற காலணி.
தண்டு-தண்டி.
தண்டித்தல் = பருத்தல். தண்டி-தடி. தடித்தம் = பருத்தல்.
தடி
= பருத்த கோல். தடிமன் =பருமை. தடியன்= பூசணி.
தண்டு-தண்டி.
தண்டித்தல் = தடியாலடித்தல், தண்டனை
செய்தல். தண்டி-தண்டம்
= தண்டனம், தண்டனை.
தண்டம்-தண்டா
= மூவகைத் தண்டனைகளுள் ஒன்று.
தண்டம்
= 1. தண்டனை.
"தண்டமுந்
தணிதிநீ பண்டையிற் பெரிதே" |
(புறம்.
10: 6)
|
2.
வீண். எ-டு. தண்டச்சோறு.
தண்டனம் - தண்டன
|