பக்கம் எண் :

6வடமொழி வரலாறு

     தமிழ்த் தருக்கநூல் எழுபொருட் பாகுபாட்டை அடிப்படை யாகக் கொண்டது. 'தர்க்க பரிபாஷை' என்னும் நூலிற் காட்டப் பெற்றுள்ள அகத்தியத் தருக்க நூற்பாக்களைக் காண்க. தமிழ்த் தருக்க நூலையே வடவர் வைசேடிகம் என வகுத்தனர்.

தவி-தப் (இ. வே.)

     தவித்தல் = வெப்பமாக்குதல், நீர்வேட்கை யுண்டாக்குதல். தவிக்கிறது என்னும் வழக்கை நோக்குக.

     தவிப்பு - தாகம்.

     "நிரப்புறு தவிப்பினை யொழித்திட" (அரிச்.பு.விவாக. 107).

     தவி-தாவம்-தாகம் = நீர்வேட்கை.

     தவி-தவம் = வெப்பத்தால் உடம்பை வருத்தி ஐம்புலனையடக் குதல்.

     தவம்-தவன் = தவஞ்செய்பவன். மாதவன்=பெருந்தவஞ் செய் தவன்.

     "மாதவர் நோன்பு மடவார் கற்பும்" (மணிமே. 22:208).

தவம்-தபஸ்

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண்
செய்யாமை
அற்றே தவத்திற் குரு"
(குறள். 261)

     உற்ற நோயுள், வெயிலின் வெம்மையும் பசிதாகத்தா லுண்டாகும் உடம்பின் வெம்மையும் அடங்கும்.

தளம்-தல

     தள்-தளம் = அடி, அடிப்பரப்பு.

     இதற்கு வடவர் காட்டும் ஸ்த்ரு என்னும் மூலம் பொருந் தாமை காண்க. ஸ்த்ரு = சிதறு.

     சிதறு என்னும் தென்சொல்லே, strew என்னும் ஆங்கிலச் சொற்கும் ஸ்த்ரு என்னும் வடசொற்கும் மூலமாகத் தெரிகின்றது.

தா-தா (dƒ)-இ. வே.

     பழந்தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம் என்னும் உண்மையைக் காட்டுஞ் சொற்களுள், தா என்பது ஒன்றாகும்.

"தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே"
(தொல். 929)

     "அவற்றுள்,

தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த."

(தொல். 512)