|
தமிழ் | கன்னடம் | தமிழ் | கன்னடம் | வல்லாளன் | பல்லாள | வரகு | பரகு | வலை | பலெ | வறிது | பறிது | வாவல் | பாவல் | வறுகு | பறுகு (g) | |
இங்ஙனமே சில ஏனைத் திரவிட மொழிகளிலும். |
2. தெலுங்கிற் சில சொற்களின் முதலீரெழுத்துகள் முன்பின்னாக முறை மாறிவிடுகின்றன. அன்று முதலெழுத்தாகிய உயிர்க்குறில் நீண்டுவிடுகின்றது. |
எ-டு: | | தமிழ் | தெலுங்கு | தமிழ் | தெலுங்கு | அறை | ராய் | உகிர் | கோரு (g) | இலது | லேது | உள் | லோ | உரல் | ரோலு | எழு | லேய் | |
வரை (எழுது) என்னுஞ்சொல் இம் முறையில் வராயு என்று திரிந்தபின், ராயு என்று முதன்மெய் கெட்டும் வழங்குகின்றது. இவ்வகையினதே வர்-வ்ரா-ரா (வா) என்னுந் திரிபும். |
3. துடவ மொழியில் பல சொற்களின் ஆகார முதல் ஓகார முதலாகத் திரிந்துள்ளது. |
தமிழ் | துடவம் | தமிழ் | துடவம் | ஆடு | ஓட் | நாய் | நோய் | ஆறு | ஓற் | நாவு | நோவ் | கா | கோவ் | நான்கு | நோங்க் | காண் | கோண் | பாசி | போதி | காய் | கோய் | பாம்பு | போப் | கால் | கோல் | மார் (மார்பு) | மோர் | தாய் | தோய் | மான் | மோவ் | தான் | தோன் | வாய் | போய் | | | வாழ் | போத்க் | |
ஆ-ஓ திரிபும், வ-ப திரிபும் சேர்ந்து வாய்-போய் என்று திரிந்தது போன்றதே, வா-போ திரிபும். |
குமரிநிலத் தமிழே திரவிட மொழிகட்கெல்லாந் தாயாதலின், இக்காலத் தமிழிலும் ஒருசில சொற்கள் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவத்தையும் ஆணிவேரையும் அறிந்துகொள்ள, போதிய சான்று அத் தமிழிலேயே உள்ளதென்று அறிதல் வேண்டும். |
|
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே". (தொல். பெய.1) |
|
|