பக்கம் எண் :

முதற் பகுதி - கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

தென்னாட்டிலே சாலிவாடி புரத்தில் கர்த்தப ஸ்வாமி மடங்கட்டித் தனது சீடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் அங்கே ரோஜா என்ற பாம்புப் பெண் வந்தாள். எலுமிச்சம் பழத்தைப் போலே நிறம்; மானைப்போலே விழி; பூர்ண சந்திரன்போலே முகம்; உடம்பிலே லாவகமும், கட்டும், பெண் புலியைப் போலே.

ஒரு நாள் மாலை நேரம்; சாமியார் பகற் சோறு தின்று, அந்த சிரமத்தினால் நாலைந்து மணி நேரம் தூங்கி விழித்த பிறகு, அந்த ஆயாஸம் தீரும்பொருட்டு நாலைந்து தோசைகளைத் தின்று, அரைப்படி பாலைக் குடித்துவிட்டு, வாயிலே வாஸனைப் பாக்குப் போட்டு மென்று கொண்டு இரண்டு சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்.