பக்கம் எண் :

த.கொ. செட்டி கத

இப்படி இருக்கையில், ஒரு வேலையாள் வந்து, "கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர் வந்திருக்கிறார். எஜமானைப் பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறார்" என்று செட்டியிடம் தெரிவித்தான்.

செட்டி சாமியாரை நோக்கி "வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

சந்நியாசி -

"ஆக்ஷேபமென்ன?" என்றான்.

"வரச் சொல்லு" என்று செட்டி உத்தரவு கொடுத்தான்.

தட்டிக்கொண்டான் செட்டியும், ஆரூட ஸ்வாமிகளும் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயரும், மூன்று பேருமாக சம்பாஷிக்கலானார்கள்:-

க.கா.க. -

ஸ்வாமிகளுக்கு எவ்விடம்?

ஆ.ஸ். -

சந்நியாசிக்கு இடமேது? வீடேது?

த.கொ.செ. -

ஞானத்தினுடைய கடல், உபாஸனையே திருவடிவம், பக்திக் கோயில். ஸ்வாமிகளுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றுந் தெரியும்.

க.கா.க. -

இலக்கணத்தின் கருத்தே அது.

ஆ.ஸ். -

உண்மையான துறவி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்கலாகாது. ஒரு முறை புசித்த வீட்டில் மறுமுறை புசிக்கலாகாது. பிரம்மம் ஒருமை. உலகம் பன்மை.

த.கொ.செ. -

பிரம்மம் ஒருமை, பிரம்மங்கள் பன்மை என்று உத்தரவாக வேணும்.