பக்கம் எண் :

வெண்பா

செட்டி -

"தெய்வமே துணை" என்றான்.

சாமியார் -

"குருவுந் துணை" என்றார்.

செட்டி -

"எனக்கு நான்மை கிடைக்குமா?"

சாமி -

"கிடைக்கும்." செட்டி - "என் துக்கம் தீருமா?"

சாமி -

"தீரும்."

செட்டி -

"கணக்கு என் கைக்குத் திரும்பி வந்தால் நான் எந்தத் தருமத்துக்கும் அவ்விடத்தில்        கட்டுப்பட்டிருப்பேன்."

சாமி -

"செட்டியாரே, செட்டியாரே, நமக்கு நீ எவ்விதமான தர்மமும் செய்ய வேண்டாம்.        உம்முடைய கடமையை நேரே கவனித்தால் அதுவே போதும்

செட்டி -

"என் கடமை யாது?"

சாமி -

இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய்        திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள்        விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:-