| "மண்ணுலகத்தவனாக இருந்தபோதிலும் நல்ல பார்வைகள் பார்க்கிறாய்" என்று நாண முணர்த்தி, "யோசித்துக் கொண்டு நில்லாதே, பற" என்றாள்.  "உன் பெயரென்ன?" என்று கேட்டேன்.  "வெகு நேர்த்தி! நானொன்று சொன்னால் நீ யொன்று பேசுகிறாய், என் பெயர் எதற்கு?"  "சொல்லு, பார்ப்போம்."  "என் பயர் - பர்வதகுமாரி. என்னை, சாதாரணமாக, குமாரி என்று அழைப்பார்கள்."  "நல்லது, நான் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா?"  "ஓ"  "சரி, பர்வதகுமாரி, நான் பறப்பதெப்படி? உன்னைப் போல எனக்கு இறகுகள் இருக்கின்றனவா?" என்று கேட்டேன்.  "நான் வந்தபொழுது என்மீது இறகுகள் இருக்கக்கண்டாயா?" என்றாள்.  "உன் முகத்தைக் கண்டு பரவசமடைந்ததில் இறகுகளைக் குறிப்பிட முடியவில்லை. நீ பறக்கும் பிரஸ்தாபம் தொடங்கிய போதுதான் பார்த்தேன்."  "ஸ்துகி பிறகு பேசலாம். ஆரம்பத்திலே இறகுகள் கண்ணுக்குத் தெரிந்ததா? சொல்." "தெரியவில்லை." |