பக்கம் எண் :

தேவ விகடம்

நாரதர், "இருபதினாயிரம் பொன்னாகும்" என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்துப் பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதி விட்டது. பிறகு பிள்ளையார் நாரதரை நோக்கி "இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது, இதுவும், பொய்தானா?" என்று கேட்டார்.

"பொய்தான்; சந்தேகமென்ன?" என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய் விட்டார்.