பக்கம் எண் :

தர்மலோகம்

தபோமுனி அந்த உபாத்தியாயரை நோக்கி, "கண்வாசாரியாரே, இவர்கள் என்ன பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டான். அதற்குக் கண்வர் "இவர்கள் கணிதசாஸ்திரம் படிக்கிறார்கள்" என்றார்.

தபோமுனி : - "முன் நான் வரும்போது சிற்ப சாஸ்திரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்களே?"

கண்வர் :- "ஆம், அவர்கள் தொழிலாளிகள். இப்போது இருந்தவர்கள் பிரம, க்ஷத்திரிய என்னும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்."

"சர்வ சாஸ்திரங்களின் கடல்" என்று நான் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

அதுகேட்ட கண்வர் :- "அப்படி யொன்றுமில்லை. எனக்கு வேதாந்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இவற்றைத் தவிரச் சிற்பம், கணிதம் என்ற இரண்டுதான் தெரியும். வந்து கேட்கும் மாணாக்கர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன். அது எனது தர்மம்" என்றார்.

இவ்வளவு நேரத்தின் பிறகு தபோமுனி கண்வாசாரியாரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, "இவருக்குப் பிராமண தர்மத்தைக் காட்டவேண்டு மென்பதாகத் தங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்" என்றார். கண்வர் புன்னகைசெய்து, "ஆகா! சர்வ தர்மங்களுக்கும் தாமே மூலஸ்தானமா யிருக்கும்போது, என்னை ஒரு பொருளாகக் கருதி வந்தது வியப்பே. தமது கட்டளைக் கிணங்கி அவர் கேட்பதெல்லாம் கூறும் கடமையைச் சிரமேற்கொண்டிருக்கிறேன்" என்றனர். எனக்குத் தொடக்க முதலாகவே இருந்த ஆவலை எவ்வாறோ அடக்கி வைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவர் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவனாய், அவ்வாசாரியனிடம் நியாயஸ்தலத்திலே சாக்ஷியிடம்