பக்கம் எண் :

தர்மலோகம்

கேட்பது போல் - ஆனால் வணக்கம், பக்தி, சிரத்தை, இவற்றுடன் - கேள்விகள் சோனாமாரியாகப் பொழிந்தேன். அவரும் சலிப்பில்லாமல், ஐயந்திரிபற மறுமொழிகள் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துக் கொண்டு வந்தார்.

சில கேள்விகளையும் உத்தரங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

கேள்வி : - "ஸ்வாமி. ஒருவன் பிறக்கும் போதே பிராமணனாகப் பிறக்கிறானா? அல்லது பயிற்சியால் பிராமணனாகிறானா?"

உத்தரம் : - "பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். "சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:" என்று பகவான் சொல்லி யிருக்கிறார்."

கேள்வி :- "ஸ்வாமி, இந்த விதி அனுபவத்தில் இருக்கிறதா?"

உத்தரம் :- "ஆம், எனது பிதா க்ஷத்திரியர்; நான் பிராமணன்; என் மக்கள் பன்னிரண்டு பேரில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களையெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய என்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, சுபாவம் முதலியவற்றைக் கருதி, உரியவாறு பயிலும்படி செய்திருக்கிறேன்."

கேள்வி :- "மண்ணுலகத்திலே பாரததேசத்தில்தான் வர்ணா சிரம பேதங்கள் இருக்கின்றன. அங்கே தாம் சொல்வது போல நடக்கவில்லையே?"